பெரியார் குறித்த பேச்சு.. சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்த பெரியாரிய அமைப்பினர்!

Jan 22, 2025,06:42 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெரியார் குறித்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பெரியார் அமைப்பினர் மற்றும் மே 17 இயக்கங்கள் சீமான் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் வீடு இருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி இருந்தார். அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சீமானின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 




இதற்கிடையே தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய, சீமானிடம் ஆதாரம் கேட்டு, கடந்த 16ம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டை, தந்தை பெரியார் அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, சீமான் வீட்டை நோக்கி கல் வீசியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். 


இந்த நிலையில்,  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சீமானின் வீட்டு முன்பு வரும் 22 ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பெரியார் திக, திவிக அமைப்பினர் மற்றும் மே 17 இயக்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து அப்பகுதியில் கூடினர். இதையடுத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் சீமானின் வீட்டு முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 


போராட்டக்காரர்களுக்கு எதிராக சீமான் கட்சியினரும் உருட்டுக்கட்டைகள் சகிதம் நேற்று இரவு முதலே வீட்டு முன்பும் வீட்டைச் சுற்றிலும் ஆங்காங்கே நின்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. 


முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், பெரியார் மீது விமர்சனம் வைத்த பின், பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் பொய் என்று வருகிறார்கள்.  15 வருடமாக எங்கிருந்தீர்கள். அந்த புகைப்படம் முதல் முறையாக வெளிவந்த போதே சொல்ல வேண்டியதுதானே. எத்தனை பேர் எடிட் செய்தீர்கள்.. நீங்க எல்லாம் பெரிய எடிட்டரா.. என்ன காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். 


பெரியாரா, பிரபாகரனா என்று மோதி பார்ப்போம் என்று ஆகிவிட்டது. பெரியாரை விமர்சித்ததற்கு திராவிடர் கழகமே அமைதியாக இருக்கிறது. மற்ற அமைப்புகள் தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால், நான் அங்கு பதிலளிப்பேன் என்று ஆவேசமாக கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

news

Bangladesh in Tears: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஜியா காலமானார்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 30, 2025... இன்று மோட்சம் தரும் வைகுண்ட ஏகாதசி

news

பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்

news

திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

news

Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை

news

நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்