லிமா: பெரு நாட்டின் ஆபாசப் பட உலகின் ராணி போல வலம் வந்தவரான தைனா பீல்ட்ஸ் திடீரென மரணமடைந்துள்ளார். அவருக்கு 24 வயதுதான் ஆகிறது. ஆபாசப் பட உலகினர் குறித்த பரபரப்பான தகவல்களை வெளியிட்ட சில மாதங்களிலேயே அவரது மரணம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைனா பீல்ட்ஸ், பெரு நாட்டின் மிகப் பிரபலமான ஆபாசப் பட நடிகை. இவரது படங்களுக்கு அங்கு பெரிய கிராக்கியே உள்ளது. இவரது படங்கள் என்றாலே அது மிகப் பெரிய அளவில் விரும்பிப் பார்க்கப்படும். அந்த அளவுக்கு பிரபலமாக வலம் வந்தவர் பீல்ட்ஸ்.
இந்த நிலையில்தான் அவர் தனது வீட்டில் பிணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் ஆபாசப் பட உலகைச் சேர்ந்த நடிகைகளை எந்த அளவுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மோசம் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இதனால் பெரு ஆபாசப் படஉ லகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் அவரது மறைவுச் செய்து வந்துள்ளது.
இதுகுறித்து பீல்ட்ஸுக்கு நெருக்கமானவரான அலெஜான்ட்ரா ஸ்வீட் கூறுகையில், தைனாவை அனைவரும் நினைவுகூறுவோம். மிகவும் நல்ல பெண் அவர். தூய்மையான உள்ளத்துக்குச் சொந்தக்காரர். எங்கிருந்தாலும் அவர் ஒரு தேவதையாக வலம் வருவார் என்று கூறியுள்ளார்.
முன்னதாக தைனா கொடுத்திருந்த பரபரப்பான பேட்டியில், தான் ஆபாசப் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் சந்தித்த பல்வேறு கொடுமைகளை விளக்கியிருந்தார். தன்னை பாலியல் ரீதியாக பலரும் தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.
முதலில் அதிலிருந்து தான் விலக முடியாமல் தத்தளித்ததாகவும், பின்னரே தான் சுதாரித்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார் தைனா பீல்ட்ஸ்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}