சென்னை: டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய்யை காண அதிகளவில் கூட்டம் வந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தவெக தலைவர் விஜய் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து அமைதி காத்து வந்த விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் தனது கட்சிப்பணிகளை தொடங்கி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் சென்னையில் தவெக சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் விஜய் கலந்து கொண்டு பேசுகையில், எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்று தெரிவித்ததுடன், திமுக குறித்து கடும் விமர்சனமும் செய்தார்.
அதன்பின்னர் சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று சேலம் காவல் ஆணையரிடம் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அடுத்த மாதம் 4ம் தேதி அனுமதி கோரப்பட்டுள்ளது. சனிக்கிழமைக்கு பதிலாக அதில் வியாழனன்று விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் ஒன்றில் அனுமதி வழங்க கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
சந்தோஷம்!
நம்பிக்கை அதானே எல்லாம்!
{{comments.comment}}