சென்னை: ஆளுநர் மாளிகை வாசல் அருகே பெட்ரோல் குண்டு வீசிக் கைதான ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுக்க போலீஸார் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவுடி கருக்கா வினோத். இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் இவர் ஜாமீனில் விடுதலையாகி வந்தார். வந்தவர், நேராக ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டை வீசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 25ம் தேதி இவர் பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் வாயிலில் வீசியுள்ளார். தனி ஆளாக வந்து துணிச்சலாக இவர் பெட்ரோல் குண்டு வீசியது பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கருக்கா வினோத்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது ரவுடி கருக்கா வினோத்தை விசாரிக்க காவல் துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் அவர் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார், யார் சொல்லி செய்தார், யாராவது இவருக்குப் பின்னணியில் உள்ளனரா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.. பல குழப்பங்கள் நீங்கும் என்பதால் கருக்கா வினோத் போலீஸ் காவலில் சொல்லப் போகும் தகவல்களுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}