புதுடில்லி: இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் விறுவிறுப்பாக தேர்தலுக்கான வேலைகளை செய்ய தொடங்கியுள்ளன. தேர்தல் அறிக்கை, யாருடன் கூட்டணி, என்ன திட்டங்களை அறிவிக்கலாம் என பல்வேறு விதமான செயல்களில் கட்சிகள் மும்முரமாகியுள்ளன. இந்நிலையில் மத்தியில் ஆளும் கட்சி என்ன என்ன திட்டங்களை வெளியிடும் என்று பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தேர்தலுக்கு முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெகுவாக குறைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்தில் தான் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும், வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் குறைந்தது. இந்த விலை குறைப்பை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த வருடம் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் அனைத்து விலையும் உயர்ந்தது. நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல் விலையால் மக்கள் மிகுந்த கவலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பின்னர் 5 மாநிலத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது.
இந்நிலையில் மக்கள் நலன் கருதி இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விலையை குறைக்கும் படி மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டி வருகிறது பாஜக அரசு.
பெட்ரோல் விலைக் குறைப்பு மட்டுமல்லாமல் மக்களுக்கு பலன் தரக் கூடிய மேலும் பல திட்டங்களையும் அடுத்தடுத்து மத்திய அரசு அறிவிக்கலாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பும் உள்ளது. இதுதவிர இடைக்கால பட்ஜெட்டிலும் கூட பல அறிவிப்புகள், சலுகைகளை மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பாமகவில் எனக்கே அதிகாரம்.... என்னை சந்தித்த நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்: டாக்டர் ராமதாஸ்
TVK VIjay Tour: விஜய்யின் அரசியல் சூறாவளி சுற்றுப்பயணம்...ஆகஸ்ட் 15ல் துவக்கம்?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தொடர் கனமழை... வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு!
ஆனி மாத ஆசாட அமாவாசை.. மிகச் சிறப்பானது.. மிகவும் முக்கியமானதும் கூட!
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து விமர்சனம்.. ஆ ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
ரயில் கட்டண உயர்வு செய்தி.. மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
Axiom4: விண்வெளியில் புது வரலாறு எழுதும் இந்தியா.. ISS நிலையத்திற்குப் பயணமானார் சுபான்ஷு சுக்லா
மூன்றாவது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}