வாஷிங்டனுக்கு மேலே.. நடு வானில் மோதிக் கொண்ட விமானமும் ஹெலிகாப்டரும்.. 19 பேர் பலி

Jan 30, 2025,03:54 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி போடோமேக் ஆற்றில் விழுந்தன.  விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 60 பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்தனர். அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் இருந்தனர். 




இந்த விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளி செய்தி நிறுவனமான பிசிஎஸ் கூறுகிறது. ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் 33 வது ஓடுதளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று விமான போக்குவரத்து நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்பு குறித்த அமெரிக்க அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.


அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை தேடும் பணியும் தற்பொழுது முடிக்கி விடப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்