வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி போடோமேக் ஆற்றில் விழுந்தன. விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 60 பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்தனர். அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் இருந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளி செய்தி நிறுவனமான பிசிஎஸ் கூறுகிறது. ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் 33 வது ஓடுதளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று விமான போக்குவரத்து நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்பு குறித்த அமெரிக்க அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானம் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை தேடும் பணியும் தற்பொழுது முடிக்கி விடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}