சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி ஜிஎஸ்டி சாலையில் கிண்டி முதல் பல்லாவரம் வரையிலான சாலையில் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் அவர் முதலில் சென்னையில் புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைக்கிறார். ரூ. 1260 கோடி மதிப்பீட்டில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான அலங்காரங்களுடன் இந்த முனையம் மிகவும் அதி நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதேபோல ��ாம்பரம் - செங்கோட்டை புதிய எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதுதவிர 37 கிலோமீட்டர் தொலைலவிலான திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை மாற்றப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பிற்பகலில் சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மாலையில் ரூ. 3700 கோடி மதிப்பிலான பல்வேறு சாலைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. இதே விழாவில் மதுரையில் கட்டப்பட்டுள்ள 7. 3 கிலோமீட்டர் நீளம் கொண்ட தமிழ்நாட்டிலேயே மிகவும் நீளமான பாலத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
போக்குவரத்து மாற்றம்
பிரதமர் வருகையைத் தொடர்ந்து விமானநிலையம் உள்ள ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிண்டி முதல் பல்லாவரம் வரையிலான சாலையில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். அனைத்து வாகனங்களும் வேளச்சேரி வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் வண்டலூரிலருந்து பூந்தமல்லி வழியாக திருப்பி விடப்படும்.
இந்த காலகட்டத்தில் மெட்ரோ அல்லது புறநகர் ரயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
TVK Govt.. இது விஜய் மாடல் அரசு.. சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்!
தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!
வானவில் என்னும் மாயவில்
என் கண்ணில் என்ன பார்த்தாய்.. இதுதான் காதலா?
எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
காற்று
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
{{comments.comment}}