11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

Jun 10, 2025,01:33 PM IST

டில்லி : மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 11 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது தலைமையின் கீழ் இந்தியா அடைந்துள்ள மாற்றத்தை, குறிப்பாக பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ளார். நாட்டை "வலுவானதாக" மாற்றுவதில் மக்களின்  உறுதிப்பாட்டையும் அவர் பாராட்டினார்.


கடந்த 11 ஆண்டுகளில் நமது பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு அடைவது என்பதில் தெளிவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மக்கள் இந்தியாவை வலிமையாக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஒன்றுபட்டு நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது! #11YearsOfRakshaShakti" என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள தளமான X இல் பதிவிட்டுள்ளார். 


இதேபோல, மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜே.பி. நட்டா 2014 முதல் தற்போது வரையிலான அரசின் முக்கிய சாதனைகளை பட்டியலிட்ட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




இந்தியா உலகின் 10வது பெரிய பொருளாதாரத்தில் இருந்து 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. விரைவில் 4வது இடத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தற்போது வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக உள்ளது.


பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) சமூகங்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய நலத்திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் அதிகரித்த மகப்பேறு விடுப்பு மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான ஆதரவும் அடங்கும்.


25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தீவிர வறுமை 80% குறைந்துள்ளது.  பிரதமர் மோடி இந்திய அரசியலை சமாதானப்படுத்துதல் மற்றும் பிளவுபடுத்துதலில் இருந்து செயல்திறன், பொறுப்புக்கூறல் மற்றும் வளர்ச்சி சார்ந்த நிர்வாகமாக மாற்றியுள்ளார்.


இந்தியா 220 கோடி இலவச கோவிட் தடுப்பூசி டோஸ்களுடன் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நடத்தியது. மேலும் ஆபரேஷன் கங்கா (Operation Ganga) மற்றும் தடுப்பூசி மைத்ரி (Vaccine Maitri) போன்ற முக்கிய மீட்பு நடவடிக்கைகளை வழிநடத்தியது.


1995 இல் தொடங்கப்பட்ட நீண்டகால செனாப் பாலம் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி, ஜூன் 6, 2025 அன்று திறந்து வைத்தார்.


பிரதமர் மோடியின் கீழ் உள்ள கொள்கைகள் சீர்திருத்தம்-செயல்திறன்-மாற்றம் (reform-perform-transform) என்ற மாதிரியைப் பின்பற்றுகின்றன. அனைவருக்கும் வளர்ச்சி (Sabka Saath, Sabka Vikas) மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.


அரசியலமைப்பின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. இது வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்தது மற்றும் ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஆழமாக ஒருங்கிணைத்தது.


முக்கிய சீர்திருத்தங்களில் முத்தலாக் ஒழிப்பு, வக்ஃப் சட்டம் திருத்தங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் ஆகியவை அடங்கும் என்று நட்டா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்