மனித வாழ்க்கையில் முக்கிய பங்காற்றத் தொடங்கி விட்டது ஏஐ.. பாரீஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Feb 11, 2025,04:27 PM IST
பாரீஸ்: பாரீஸ் நகரில் தொடங்கியுள்ள செயற்கைத் நுன்னறிவு தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாடியபோது, நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்ற தொடங்கி விட்டது செயற்கைத் நுன்னறிவுத் தொழில்நுட்பம் என்று தெரிவித்தார்.

மனித வாழ்க்கையை ஒருங்கிணைக்கும் மிகப் பெரிய வேலையை ஏஐ செய்வதாகவும் அவர் தெரிவித்தார். பாரீஸில், ஏஐ தொடர்பான மாநாடு தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இதற்காக அவர் பாரீஸ் சென்றார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும், பிரதமர் மோடியும் இணைந்து மாநாட்டைத்  தொடங்கி வைத்தனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய உரையிலிருந்து:



மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியப் பங்காற்றத் தொடங்கி விட்டது ஏஐ. செயற்கை நுன்னறிவால்  பல நல்ல விஷயங்கள் உள்ளன என்றாலும் அதன் பாதகங்களையும் நாம் கவனத்தில் கொள்ளத் தவறி விடக் கூடாது.

நமது திறமைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். நம்பிக்கைக்குரிய ஒரு தொழில்நுட்பமாக இது மாற வேண்டும். இதில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது. உலகத்துக்கும், மனித குலத்துக்கும் இது பலன் தர வேண்டும். மக்களை மையமாக வைத்து இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்களை பரப்புவது, போலியான உருவங்களை உலவ விடுவது  போன்ற பிரச்சினையும் உள்ளன. நாம் அதையும் தீர்க்க வேண்டும்.

பல கோடி மக்களின் வாழ்க்கையை ஏஐ மேம்படுத்த உதவும் என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. மருத்துவம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் நமக்கு பெரும் உதவி செய்யும். 

ஏஐ தொழில்நுட்பம் வந்தால் வேலையிழப்பு ஏற்படும் என்று அஞ்சப்பட்டது. ஆனால் எந்த ஒரு வேலையும் ஒரு தொழில்நுட்பத்தால் அழியாது. மாறாக அது மேம்படவே செய்யும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்களுக்கு மிகவும் குறைந்த செலவில் நாங்கள் டிஜிட்டல் பொது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம். எங்களது பொருளாதாரத்தை நவீனப்படுத்தவும், சீரமைக்கும், ஆட்சி முறையை சிறப்பாக்கவும், பல கோடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இது உதவியுள்ளது.

டிஜிட்டல் காமர்ஸை அனைவருக்கும் எடுத்துச் செல்ல இந்தத் தொழில்நுட்ப் உதவியுள்ளது. இந்தியாவின் தேசிய செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்ப இலக்கை அடைய இது உதவியுள்ளது.  அனைவரும் உகந்த தொழில்நுட்பமாக நாங்கள் மாற்றி வருகிறோம்.  ஏஐ தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதிலும், தொழில்நுட்ப சட்ட ரீதியான தீர்வுகளை அடைவதிலும் இந்தியா முன்னோடியாக உள்ளது என்றார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

news

சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

news

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!

news

டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

news

கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!

news

15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!

news

Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

news

நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

news

மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்