கவுகாத்தி : இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சீன எல்லைக்கு அருகிலுள்ள அசாமின் மோரான் (Moran) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால தரையிறங்கு தளத்தை (Emergency Landing Facility - ELF) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
போர் காலங்கள் அல்லது அவசர காலங்களில் போர் விமானங்கள் தடையின்றி தரையிறங்கும் வகையில் இந்த நெடுஞ்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் வடக்கு எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தத் தளம் குறிப்பாக இந்திய விமானப்படையின் செயல்பாடுகளுக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சீன எல்லைக்கு மிக அருகில் இருப்பதால், இது பாதுகாப்பு யுக்தி ரீதியாக (Strategically) மிக முக்கியமானது.

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: இதனுடன் சேர்த்து, பிரம்மபுத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். ரூ.3000 கோடி செலவில் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களின் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், ராணுவத் தளவாடங்களை விரைவாகக் கொண்டு செல்லவும் உதவும்.எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்பதை இந்தத் திட்டம் பறைசாற்றுகிறது.
இந்தத் திட்டங்கள் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், தேசிய பாதுகாப்பிற்கு ஒரு கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு!
இயல்பாய்.. எளிமையாய் இருப்பது.. (Being Ordinary and Simple)
40 சீட் கொடுத்தே தீரனும்...மீண்டும் புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்
தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்: நயினாருக்கு டிடிவி தினகரன் அட்வைஸ்
உன் நேசம் என் சுவாசம்!
புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...9.44 லட்சம் பேர் வாக்காளர்களாக அறிவிப்பு
காதல் .. காட்சி கவர்ச்சியின் நேர்ச்சிப் பூக்கள்.. ஆயிரம் உணர்வுகளின்.. அற்புதத் தூண்டல்கள்!
புதிய முகவரிக்கு மாறிய பிரதமர் அலுவலகம்...இனி 'நார்த் பிளாக்' 'சவுத் பிளாக்'என்னவாகும்?
காதலென்னும் தேர்வெழுதி.. The Heart's Interrogation: Writing Love Exam!
{{comments.comment}}