பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பிரதமர் மோடியின் ரஷ்யா சுற்றுப்பயணம் ரத்து!

Apr 30, 2025,06:28 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏப்ரல் 22 அன்று, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள்,  26 பேரை பலிகொண்ட பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்த இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, பாகிஸ்தானுக்கான விசா வழங்குதலை இந்தியா ரத்து செய்துள்ளது. 


பிரதமருக்குப் பதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.




பஹல்காம் தாக்குதல் நடந்த சமயத்தில், பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார். தாக்குதலைத் தொடர்ந்து தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்பினார். அதன் பிறகு, பல முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை அவர் நடத்தினார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


இந்தியா எடுத்த நடவடிக்கைகளில் முக்கியமானவை: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது, பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா சேவைகளை ரத்து செய்தது (மருத்துவ விசாக்களைத் தவிர). பாகிஸ்தானில் இருந்த இந்திய குடிமக்களை உடனடியாக நாடு திரும்பும்படி அறிவுறுத்தியது. மேலும், மூன்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியது. பாகிஸ்தானின் தூதரக அதிகாரிகளையும் குறைத்தது.


இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) பகுதியில் ஐந்து நாட்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய ராணுவம் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவம் சிறிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது" என்று தெரிவித்தது.


ஜம்மு காஷ்மீர் காவல்துறை, திங்கட்கிழமை அன்று டோடா மாவட்டத்தில் 13 இடங்களில் சோதனை நடத்தியது. பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.


இதற்கிடையே, இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரங்களுக்கான குழு (CCPA) கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் அனில் சவுகான் ஆகியோருடன்  ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இராணுவத்திற்கு "எந்த முறையில், எந்த இலக்கை, எப்போது தாக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முழு சுதந்திரம்" வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தியா நிதானமான முறையில் பாகிஸ்தானின் கொட்டத்தை எடுத்து வரும் நடவடிக்கையால் பாகிஸ்தான் தரப்பு குழம்பிப் போய் உள்ளது. அதேசமயம், இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பாகிஸ்தான் பயந்து போயிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்