டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், 26 பேரை பலிகொண்ட பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்த இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, பாகிஸ்தானுக்கான விசா வழங்குதலை இந்தியா ரத்து செய்துள்ளது.
பிரதமருக்குப் பதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹல்காம் தாக்குதல் நடந்த சமயத்தில், பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார். தாக்குதலைத் தொடர்ந்து தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்பினார். அதன் பிறகு, பல முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை அவர் நடத்தினார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியா எடுத்த நடவடிக்கைகளில் முக்கியமானவை: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது, பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா சேவைகளை ரத்து செய்தது (மருத்துவ விசாக்களைத் தவிர). பாகிஸ்தானில் இருந்த இந்திய குடிமக்களை உடனடியாக நாடு திரும்பும்படி அறிவுறுத்தியது. மேலும், மூன்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியது. பாகிஸ்தானின் தூதரக அதிகாரிகளையும் குறைத்தது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) பகுதியில் ஐந்து நாட்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய ராணுவம் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவம் சிறிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது" என்று தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை, திங்கட்கிழமை அன்று டோடா மாவட்டத்தில் 13 இடங்களில் சோதனை நடத்தியது. பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரங்களுக்கான குழு (CCPA) கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் அனில் சவுகான் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இராணுவத்திற்கு "எந்த முறையில், எந்த இலக்கை, எப்போது தாக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முழு சுதந்திரம்" வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா நிதானமான முறையில் பாகிஸ்தானின் கொட்டத்தை எடுத்து வரும் நடவடிக்கையால் பாகிஸ்தான் தரப்பு குழம்பிப் போய் உள்ளது. அதேசமயம், இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பாகிஸ்தான் பயந்து போயிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}