ஜெகதால்பூர், சட்டிஸ்கர்: ஜாதி வாரி கணக்கெடுப்பு என்ற பெயரில் இந்துக்களைப் பிரிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பீகாரில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்களையும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலம் என்ற பெருமையையும் பீகார் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஜாதி வாரிக் கணக்கெடுப்பை விமர்சித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது இந்துக்களைப் பிரிக்க நடக்கும் சதி என்றும் அவர் வர்ணித்துள்ளார். சட்டிஸ்கர் மாநிலம் ஜகதால்பூரில் நடந்த பிரமாண்ட பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி ஒரு வெளிநாட்டுடன் ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பேசி அதில் காங்கிரஸ் கட்சி மகிழ்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நாட்டின் மூத்த கட்சியை அதன் தலைவர்கள் நிர்வகிக்கவில்லை. மாறாக தேச விரோத சக்திகளுடன் தொடர்புடைய சிலர்தான் அதை வழி நடத்துகின்றனர். நேற்று முதல் காங்கிரஸ் கட்சி வேறு குரலில் பேசத் தொடங்கியுள்ளது. நாட்டின் பெரிய மக்கள் தொகைதான் மக்களின் உரிமைகளை முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் மோடியைப் பொறுத்தவரை, ஏழைகள்தான் நாட்டின் மிக முக்கிய குடிமக்கள். அவரகளுக்குத்தான் முதல் உரிமை உண்டு. ஏழைகளின் நலன்தான் எனது குறிக்கோளும் கூட.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களின் உரிமைகளை அவர்கள் பிரிக்க நினைக்கிறார்கள். அப்படியானால் யாருக்கு முதல் உரிமை.. யார் அதிகம் உரிமைகளைப் பெறுவார்கள்.. காங்கிரஸ் தலைவர்கள் இதை தெளிவுபடுத்த வேண்டும். அப்படியானால் சிறுபான்மையினர் நிலை என்னாகும்.. முஸ்லீம்கள் என்னாவார்கள்... இந்துக்கள்தான் நாட்டின் பெரும்பான்மை மக்கள்.. அப்படியானால் அத்தனை உரிமைகளும் இந்துக்களுக்கே போய் விடுமா.. காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்துக்களைப் பிளவுபடுத்த காங்கிரஸ் முயலுகிறது, முடிவு செய்துள்ளது. இதை நான் ரொம்ப காலமாக சொல்லி வருகிறேன். காங்கிரஸ் கட்சியை நிர்வகிப்பது காங்கிரஸ்காரர்கள் அல்ல. பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வாய் மூடி அமைதி காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தேச விரோத சக்திகளுடன் தொடர்புடையவர்கள்தான் இப்போது கட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்துக்களைப் பிரித்து நாட்டை துண்டாடத் துடிக்கிறது காங்கிரஸ். ஏழை மக்களையும் பிளவுபடுத்தத் துடிக்கிறது காங்கிரஸ். என்னைப் பொறுத்தவரை ஏழைகள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள். அவர்கள் நலம் பெற்றால் நாடு நலம் பெறும் என்றார் பிரதமர் மோடி.
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்...3 நாட்கள் மட்டுமே அவகாசம்
ஐபிஎல் 2026 : சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
Monday Motivation Short Story: பரிதவிப்பு!
மீரா... டைரியை முழுசா படிச்சியா?.. (நீ மழை - 8)
Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!
DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி
C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!
{{comments.comment}}