கோயம்பத்தூர்: கோவை மாநகரில் நடைபெறவிருக்கும் இயற்கை வேளாண் விவசாயிகளுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார்.
இதற்காக அவர் இன்று மதியம் ஒரு மணிக்கு புட்டபர்த்தியிலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு கோவை வந்தடைவார் பிரதமர் மோடி. பிரதமரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர். என். ரவி உள்ளிட்டோர் வரவேற்கவுள்ளனர். பிரதமர் வருகையைத் தொடர்ந்து, கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் எந்த விதமான வாகனங்கள் நிறுத்துவதற்கும் 12 மணி முதல் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைப்போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன . இதுதொடர்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்து வெற்றி கண்ட விவசாயிகள் 18 பேருக்கு பிரதமர் விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறார்.
மாநாடு, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ளது. இன்று தொடங்கி வருகிற 21ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியும் இடம் பெறுகிறது. 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் இயற்கை முறையில் விளைந்த விளைபொருள்கள் கண்காட்சி நடைபெறும்.
செய்தி: ஷீலா ராஜன்
தாய்மொழியைக் கொண்டாடுவோம்.. மொழி ஒரு அறிவியல் பார்வை!
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
{{comments.comment}}