கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை

Nov 19, 2025,10:24 AM IST

கோயம்பத்தூர்: கோவை மாநகரில் நடைபெறவிருக்கும் இயற்கை வேளாண் விவசாயிகளுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார்.


இதற்காக அவர் இன்று மதியம் ஒரு மணிக்கு புட்டபர்த்தியிலிருந்து தனி விமான மூலம்  புறப்பட்டு கோவை வந்தடைவார் பிரதமர் மோடி. பிரதமரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர். என். ரவி உள்ளிட்டோர் வரவேற்கவுள்ளனர். பிரதமர் வருகையைத் தொடர்ந்து, கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 




காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் எந்த விதமான வாகனங்கள் நிறுத்துவதற்கும் 12 மணி முதல் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைப்போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன . இதுதொடர்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை வேளாண்  முறையில் விவசாயம் செய்து வெற்றி கண்ட விவசாயிகள் 18 பேருக்கு பிரதமர் விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறார்.


மாநாடு, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ளது. இன்று தொடங்கி வருகிற 21ம் தேதி வரை நடைபெறும்  கண்காட்சியும் இடம் பெறுகிறது. 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் இயற்கை முறையில் விளைந்த விளைபொருள்கள்  கண்காட்சி நடைபெறும். 


செய்தி:  ஷீலா ராஜன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்