சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை தமிழ்நாட்டில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். தமிழ்நாட்டுத் தலைவர்களின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் ஒரு ரவுண்டு பிரச்சாரத்தை முடித்து விட்டார் பிரதமர் மோடி. நெல்லை, கன்னியாகுமரி, கோவை, மதுரை என்று ஒரு சுற்று பொதுக் கூட்டங்களை நடத்தி முடித்து விட்டார் பிரதமர் மோடி. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு அடுத்த கட்ட பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 9ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
ஏப்ரல் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவர் தீவிர பிரச்சாரத்தில் குதிக்கவுள்ளார். ரோடுஷோ, பொதுக் கூட்டங்கள் என்று பிரதமரின் பிரச்சாரப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, வேலூர் மற்றும் தென் சென்னை தொகுதிகளில் ரோடுஷோவுடன் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்த கூட்டங்களில் வேலூர் வேட்பாளர் ஏசி சண்முகம், தென் சென்னை டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை வினோஜ் பி செல்வம், வட சென்னை பால் கனகராஜ், திருவள்ளூர் தனி தொகுதி பொன் பால கணபதி ஆகியோருக்காக வாக்கு சேகரிப்பார்.
ஏப்ரல் 10ம் தேதி நீலகிரி தனி தொகுதியில் மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார் பிரதமர் மோடி. ரோடுஷோவையும் அவர் நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்து கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்வார்.
ஏப்ரல் 13ம் தேதி பெரம்பலூரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதில் பாரிவேந்தர் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பேசவுள்ளார்.
ஏப்ரல் 14ம் தேதி விருதுநகரில் பிரமாண்ட நிறைவு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகை ராதிகா உள்ளிட்டோருக்காக இதில் பிரச்சாரம் செய்து பேசவுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி தவிர, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கத்காரி, ஸ்மிருதி இராணி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}