க.சுமதி
டில்லி : இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜெகதீப் தன்கர் ராஜினாமா சர்ச்சைக்குப் பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. முதன் முறையாக சி பி ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தை தலைமையேற்று நடத்துகிறார். நடப்புக் கூட்டத் தொடரில் 14 மசோதாக்களை நிறைவேற்ற இருப்பதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. பீகார் தேர்தல், டெல்லி கார் குண்டு வெடிப்பு, எஸ் ஐ ஆர் முறைகேடுகள் போன்றவற்றை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் துவக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், நடந்து முடிந்த பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது. இந்தியா எப்போதும் எந்த சூழலிலும் ஜனநாயகத்தை இழக்காது. நாடாளுமன்ற குளிர் காலகூட்டத்தொடர் இன்று தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும். குளிர்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது கடமையை செய்ய முன் வரவேண்டும். தோல்வியால் ஏற்பட்ட விரக்தியிலிருந்து மீண்டு வந்து எதிர்க்கட்சிகள் கடமையாற்ற வேண்டும். தொடர் வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை. இவ்வாறு தமது உரையில் தெரிவித்தார்.

மேலும் காரைக்குடி அருகே சென்ற வாரம் நடந்த பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2,000,00, காயம் அடைந்தோருக்கு ரூபாய் ரூ.50,000 நிதி மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}