குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

Dec 01, 2025,05:13 PM IST

க.சுமதி


டில்லி : இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜெகதீப் தன்கர் ராஜினாமா சர்ச்சைக்குப் பிறகு  சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. முதன் முறையாக சி பி ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தை தலைமையேற்று நடத்துகிறார். நடப்புக் கூட்டத் தொடரில் 14 மசோதாக்களை நிறைவேற்ற இருப்பதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. பீகார் தேர்தல், டெல்லி கார் குண்டு வெடிப்பு, எஸ் ஐ ஆர் முறைகேடுகள் போன்றவற்றை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் துவக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், நடந்து முடிந்த பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது. இந்தியா எப்போதும் எந்த சூழலிலும் ஜனநாயகத்தை இழக்காது. நாடாளுமன்ற குளிர் காலகூட்டத்தொடர் இன்று தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும். குளிர்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது கடமையை செய்ய முன் வரவேண்டும். தோல்வியால் ஏற்பட்ட விரக்தியிலிருந்து மீண்டு வந்து எதிர்க்கட்சிகள் கடமையாற்ற வேண்டும். தொடர் வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை. இவ்வாறு தமது உரையில் தெரிவித்தார்.




மேலும் காரைக்குடி அருகே சென்ற வாரம் நடந்த பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா  ரூ. 2,000,00, காயம் அடைந்தோருக்கு ரூபாய் ரூ.50,000 நிதி மத்திய  அரசின் சார்பில் வழங்கப்படும் என தெரிவித்தார். 


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்