டெல்லி: அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. அதைச் சொல்லி யாரும் இந்தியாவை மிரட்ட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதிலிருந்து சில பகுதிகள்: அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இனி ஏற்காது. நீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய்வதில்லை.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இந்தியாவின் நதிகள் எதிரி நாட்டுக்கு நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தபோது, நமது சொந்த விவசாயிகள் தண்ணீரின்றி அவதிப்பட்டனர். இப்போது, இந்தியாவின் தண்ணீர் உரிமை இந்தியாவுக்கும் அதன் விவசாயிகளுக்கும் மட்டுமே சொந்தமானது. விவசாயிகளின் நலன் மற்றும் நாட்டின் நலன் ஆகியவற்றில் எந்த சமரசமும் ஏற்றுக்கொள்ளப்படாது. இனியும் இல்லை.

இந்தியா இனி அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது. எதிரி மேலும் எந்த துணிகரமான செயல்களைச் செய்யத் துணிந்தாலும், இந்திய ஆயுதப் படைகள் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும். ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாயாது என்று இந்தியா முடிவு செய்துவிட்டது.
ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ஆயுதப் படைகள் செய்தவை பல ஆண்டுகளாக நாம் கண்டிராதது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஒரு புதிய வழியை நாம் உருவாக்கியுள்ளோம். பஹல்காம் தாக்குதலுக்குப் பின் சந்தோஷமாக இருந்தவர்களை, அவர்களால் கற்பனை செய்ய முடியாத வகையில் தண்டித்த நமது வீரர்களுக்கு நான் சல்யூட் செய்கிறேன் என்றார் பிரதமர் மோடி.
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!
டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்
Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
{{comments.comment}}