டெல்லி: அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. அதைச் சொல்லி யாரும் இந்தியாவை மிரட்ட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதிலிருந்து சில பகுதிகள்: அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இனி ஏற்காது. நீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய்வதில்லை.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இந்தியாவின் நதிகள் எதிரி நாட்டுக்கு நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தபோது, நமது சொந்த விவசாயிகள் தண்ணீரின்றி அவதிப்பட்டனர். இப்போது, இந்தியாவின் தண்ணீர் உரிமை இந்தியாவுக்கும் அதன் விவசாயிகளுக்கும் மட்டுமே சொந்தமானது. விவசாயிகளின் நலன் மற்றும் நாட்டின் நலன் ஆகியவற்றில் எந்த சமரசமும் ஏற்றுக்கொள்ளப்படாது. இனியும் இல்லை.
இந்தியா இனி அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது. எதிரி மேலும் எந்த துணிகரமான செயல்களைச் செய்யத் துணிந்தாலும், இந்திய ஆயுதப் படைகள் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும். ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாயாது என்று இந்தியா முடிவு செய்துவிட்டது.
ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ஆயுதப் படைகள் செய்தவை பல ஆண்டுகளாக நாம் கண்டிராதது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஒரு புதிய வழியை நாம் உருவாக்கியுள்ளோம். பஹல்காம் தாக்குதலுக்குப் பின் சந்தோஷமாக இருந்தவர்களை, அவர்களால் கற்பனை செய்ய முடியாத வகையில் தண்டித்த நமது வீரர்களுக்கு நான் சல்யூட் செய்கிறேன் என்றார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம் காப்போம்!
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
கோகுலாஷ்டமி.. ஆடி சனிக்கிழமையில்.. கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் விசேஷம்!
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
தலைகொடுத்து தாயகத்தை மீட்டுத்தந்த.. தியாகத் தலைவர்களுக்கு.. நன்றி சொல்வோம்!
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
{{comments.comment}}