Donald Trump.. வாழ்த்துகள் நண்பா.. டிரம்புக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Nov 06, 2024,06:31 PM IST

டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியைப் பெற்றுள்ள  டொனால்டு டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப்பும், பிரதமர் மோடியும் கடந்த ஆண்டுகளில் நல்ல நண்பர்களாகி விட்டனர். கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலின்போது பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக பேசியிருந்தார். அதேபோல டிரம்ப் அதிபராக இருந்தபோதும், மோடியுடன் நல்லுறவை பேணி வந்தார். அமெரிக்காவில் உள்ள மோடி ஆதரவாளர்களும் கூட டிரம்ப்புக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். அவருக்கு ஆதரவாக வாக்கும் சேகரித்து வந்தனர்.



இந்த நிலையில் இந்தத் தேர்தலில் டிரம்ப் யாரும் எதிர்பாராதவிதமாக அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் முதல் ஆளாக வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எனது அருமை நண்பர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றிக்காக எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த கால உங்களது ஆட்சியின் வெற்றியின் மீது இந்த புதிய வெற்றி கட்டி எழுப்பப்பட்டுள்ளது. உங்களது அதிபர் பதவிக்காலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு மேலும் வலுப்பெற்று, இரு நாடுகளும் உலக விவகாரங்களில் இணைந்து செயல்படும் என்று நம்புகிறேன்.

இருவரும் இணைந்து இரு நாட்டு மக்களின் முன்னேற்றம், உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்