டெல்லி: இரண்டு நாள் பயணமாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு இன்று புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு நடைபெற உள்ள இந்தியா- ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினையும் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய -ரஷ்யா இடையேயான உச்சி மாநாடு ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினும் பங்கேற்றார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் இந்தியா- ரஷ்யா இடையேயான உச்சி மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசி இருதரப்பு உறவையும் வலுப்படுத்த இருக்கிறார். அப்போது இந்திய ரஷ்யா இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ளார். மேலும் 3வது முறையாக பிரதமராகியுள்ள மோடி, அதன் பின்னர் முதல் முறையாக மேற்கொள்ளும் ரஷ்யப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய- ரஷ்யா உச்சி மாநாட்டை முடித்துவிட்டு, ஜூலை 9ம் தேதி ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசுகிறார்.பின்னர் அங்கிருந்து ஜூலை 10ஆம் தேதி இந்தியா திரும்புகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
3வது முறையாக பிரதமரான பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் சென்றிருந்தார் பிரதமர் மோடி. தற்போது 2வது உலக பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}