டெல்லி: இரண்டு நாள் பயணமாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு இன்று புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு நடைபெற உள்ள இந்தியா- ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினையும் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய -ரஷ்யா இடையேயான உச்சி மாநாடு ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினும் பங்கேற்றார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இந்தியா- ரஷ்யா இடையேயான உச்சி மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசி இருதரப்பு உறவையும் வலுப்படுத்த இருக்கிறார். அப்போது இந்திய ரஷ்யா இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ளார். மேலும் 3வது முறையாக பிரதமராகியுள்ள மோடி, அதன் பின்னர் முதல் முறையாக மேற்கொள்ளும் ரஷ்யப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய- ரஷ்யா உச்சி மாநாட்டை முடித்துவிட்டு, ஜூலை 9ம் தேதி ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசுகிறார்.பின்னர் அங்கிருந்து ஜூலை 10ஆம் தேதி இந்தியா திரும்புகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
3வது முறையாக பிரதமரான பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இத்தாலிக்குச் சென்றிருந்தார் பிரதமர் மோடி. தற்போது 2வது உலக பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}