மக்கள் இயக்கங்களை உருவாக்கிய "மன் கி பாத்".. பிரதமர் மோடி பெருமிதம்

Apr 30, 2023,12:05 PM IST
டெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சி பல மக்கள் இயக்கங்களை உருவாக்க காரணமாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் மன் கி பாத் (மனதின் குரல்) என்ற சொற்பொழிவை நிகழ்த்தி வருகிறார். இந்த சொற்பொழிவின் 100வது பகுதி இன்று ஒலிபரப்பானது.

பிரதமர் நரேந்திர மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு தளங்களிலும் ஒலிபரப்ப விரிவான ஏற்பாடுகளை பாஜக செய்திருந்தது. அனைத்து மாநில பாஜக அலுவலகங்கள், ஆளுநர் மாளிகைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதுதொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதேபோல, மத்திய சுற்றுலாத்துறையும் நாடு முழுவதும் உள்ள  இளைஞர் சுற்றுலா கிளப்களில் 100வது மன் கி பாத் பகுதியை ஒலிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.




முன்னதாக பிரதமர் மோடி ஆற்றிய 100வது சொற்பொழிவின்போது கூறுகையில்,  மன் கி பாத் நிகழ்ச்சி இந்த அளவுக்கு மக்களை சென்றடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த 100வது பகுதி மட்டும் விசேஷமானது அல்ல. என்னைப் பொறுத்தவரை 100 பகுதிகளுமே விசேஷமானதுதான்.

மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடின்போது செல்பி வித் டாட்டர் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணிடம் நான் பேசினேன். அந்த ஐடியாவைக் கொடுத்தவரிடமும் நான் பேசினேன். அது மறக்க முடியாதது. 

சுவச் பாரத், காதி, ஆஸாத் கா அம்ரித் மகோத்சவ் ஆகியவை மன் கி பாத் மூலமாக மக்கள் இயக்கங்களாக மாறின என்று கூறினார் பிரதமர் மோடி.

ஐ.நா சபையில் மன் கி பாத்

இதற்கிடையே, 100வது மன் கி பாத் உரையை, ஐ.நா தலைமை அலுவலகத்திலும் ஒலிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

மன் கி பாத் முதல் எபிசோட் 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ஒலிபரப்பானது. அன்று முதல் ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைதோறும் மன் கி பாத் உரை ஒலிபரப்பாகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்