மக்கள் இயக்கங்களை உருவாக்கிய "மன் கி பாத்".. பிரதமர் மோடி பெருமிதம்

Apr 30, 2023,12:05 PM IST
டெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சி பல மக்கள் இயக்கங்களை உருவாக்க காரணமாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் மன் கி பாத் (மனதின் குரல்) என்ற சொற்பொழிவை நிகழ்த்தி வருகிறார். இந்த சொற்பொழிவின் 100வது பகுதி இன்று ஒலிபரப்பானது.

பிரதமர் நரேந்திர மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு தளங்களிலும் ஒலிபரப்ப விரிவான ஏற்பாடுகளை பாஜக செய்திருந்தது. அனைத்து மாநில பாஜக அலுவலகங்கள், ஆளுநர் மாளிகைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதுதொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதேபோல, மத்திய சுற்றுலாத்துறையும் நாடு முழுவதும் உள்ள  இளைஞர் சுற்றுலா கிளப்களில் 100வது மன் கி பாத் பகுதியை ஒலிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது.




முன்னதாக பிரதமர் மோடி ஆற்றிய 100வது சொற்பொழிவின்போது கூறுகையில்,  மன் கி பாத் நிகழ்ச்சி இந்த அளவுக்கு மக்களை சென்றடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த 100வது பகுதி மட்டும் விசேஷமானது அல்ல. என்னைப் பொறுத்தவரை 100 பகுதிகளுமே விசேஷமானதுதான்.

மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடின்போது செல்பி வித் டாட்டர் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணிடம் நான் பேசினேன். அந்த ஐடியாவைக் கொடுத்தவரிடமும் நான் பேசினேன். அது மறக்க முடியாதது. 

சுவச் பாரத், காதி, ஆஸாத் கா அம்ரித் மகோத்சவ் ஆகியவை மன் கி பாத் மூலமாக மக்கள் இயக்கங்களாக மாறின என்று கூறினார் பிரதமர் மோடி.

ஐ.நா சபையில் மன் கி பாத்

இதற்கிடையே, 100வது மன் கி பாத் உரையை, ஐ.நா தலைமை அலுவலகத்திலும் ஒலிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

மன் கி பாத் முதல் எபிசோட் 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ஒலிபரப்பானது. அன்று முதல் ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைதோறும் மன் கி பாத் உரை ஒலிபரப்பாகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்