3 மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி.. தெலங்கானா வாக்காளர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

Dec 03, 2023,05:59 PM IST

டெல்லி: சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல தெலங்கானா மக்களுக்கும், பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்காக நன்றி சொல்லியுள்ளார் பிரதமர் மோடி.


நான்கு மாநிலத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வசமிருந்து சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தானை பறித்துள்ளது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியையும் தக்க வைத்துள்ளது. இதை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமரி நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்து:




தெலங்கானாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் பாஜகவுக்கு அளித்து வரும் ஆதரவுக்காக நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போயுள்ளது. இது வரும் காலத்திலும் அதிகரிக்கும். தெலங்கானாவுடன் எங்களது உறவு பிரிக்க முடியாதது. தொடர்ந்து தெலங்கானா மக்களுக்காக பாடுபடுவோம். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அத்தனை பாஜக தொண்டர்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.


மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தேர்தலில்  மக்கள் அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கும்போது, நல்லாட்சி தரும் அரசியலுக்கும், வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவாக உள்ளனர் என்று தெரிகிறது. இதைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. 


இந்த மாநில மக்கள் பாஜகவுக்கு அளித்துள்ள ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்களது நலனுக்காக தொடர்ந்து அயராமல் பாடுபடுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.


கட்சி தொண்டர்களுக்கு சிறப்பு நன்றிகள். அவர்களது பணி மிகச் சிறந்தது. அசாதாரணமானது. ஓய்வு ஒழிச்ல் இல்லாமல் பாஜக ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் சரியாக கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் அவர்கள்தான் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்