டெல்லி: சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல தெலங்கானா மக்களுக்கும், பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்காக நன்றி சொல்லியுள்ளார் பிரதமர் மோடி.
நான்கு மாநிலத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வசமிருந்து சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தானை பறித்துள்ளது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியையும் தக்க வைத்துள்ளது. இதை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமரி நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்து:

தெலங்கானாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் பாஜகவுக்கு அளித்து வரும் ஆதரவுக்காக நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போயுள்ளது. இது வரும் காலத்திலும் அதிகரிக்கும். தெலங்கானாவுடன் எங்களது உறவு பிரிக்க முடியாதது. தொடர்ந்து தெலங்கானா மக்களுக்காக பாடுபடுவோம். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அத்தனை பாஜக தொண்டர்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.
மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கும்போது, நல்லாட்சி தரும் அரசியலுக்கும், வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவாக உள்ளனர் என்று தெரிகிறது. இதைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.
இந்த மாநில மக்கள் பாஜகவுக்கு அளித்துள்ள ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்களது நலனுக்காக தொடர்ந்து அயராமல் பாடுபடுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சி தொண்டர்களுக்கு சிறப்பு நன்றிகள். அவர்களது பணி மிகச் சிறந்தது. அசாதாரணமானது. ஓய்வு ஒழிச்ல் இல்லாமல் பாஜக ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் சரியாக கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் அவர்கள்தான் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}