பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Apr 05, 2025,12:04 PM IST

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தை  திறந்து வைப்பதற்காக  நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் ‌வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


ராமேஸ்வரத்தில் 550 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி  நாளை திறந்து வைக்கிறார். 


இதற்கு முன்னதாக  வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று  பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அநுரகுமாரா பிரதமரை வரவேற்று கௌரவித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

அதன்படி இன்று மாலை இலங்கை அதிபர் அநுரகுமாராவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 




இலங்கை பயணத்தை முடித்துவிட்டு, நாளை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மண்டபம் பகுதிக்கு காலை 11.50 மணிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.


அதன் பிறகு ராமேஸ்வரம் டூ தாம்பரம் இடையேயான ரயில் சேவையை கொடியசைத்து துவங்கி வைக்கிறார். தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலுக்கு சென்று தான் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். விழா நிறைவடைந்த பிறகு மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.



பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு  3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 10 எஸ்.பி., 40 டி.எஸ்.பி., என உயர் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாம்பன் பாலம் திறக்கும் இடம், ராமேஸ்வரம் ராமநாத கோவில், பொதுக்கூட்டம் நடைபெறும் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் கோவில் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு ராமேஸ்வரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது‌.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்