பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Apr 05, 2025,12:04 PM IST

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தை  திறந்து வைப்பதற்காக  நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் ‌வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


ராமேஸ்வரத்தில் 550 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி  நாளை திறந்து வைக்கிறார். 


இதற்கு முன்னதாக  வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று  பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அநுரகுமாரா பிரதமரை வரவேற்று கௌரவித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

அதன்படி இன்று மாலை இலங்கை அதிபர் அநுரகுமாராவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 




இலங்கை பயணத்தை முடித்துவிட்டு, நாளை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மண்டபம் பகுதிக்கு காலை 11.50 மணிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.


அதன் பிறகு ராமேஸ்வரம் டூ தாம்பரம் இடையேயான ரயில் சேவையை கொடியசைத்து துவங்கி வைக்கிறார். தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலுக்கு சென்று தான் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். விழா நிறைவடைந்த பிறகு மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.



பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு  3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 10 எஸ்.பி., 40 டி.எஸ்.பி., என உயர் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாம்பன் பாலம் திறக்கும் இடம், ராமேஸ்வரம் ராமநாத கோவில், பொதுக்கூட்டம் நடைபெறும் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் கோவில் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு ராமேஸ்வரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது‌.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்

news

திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!

news

Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?

news

ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!

news

வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை

news

போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா

news

இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

அதிகம் பார்க்கும் செய்திகள்