மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி.. புனித நீராட பிப்ரவரி 5ம் தேதியை தேர்வு செய்ததற்கு இது தான் காரணமா?

Jan 24, 2025,07:42 PM IST

டில்லி : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடுவதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 05ம் தேதி பிரயாக்ராஜ் செய்ய உள்ளார். பிரதமர் புனித நீராடுவதற்காக எதற்காக இந்த குறிப்பிட்ட நாளை தேர்வு செய்துள்ளார் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.


உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி, பிப்ரவரி 26 வரையிலான 45 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதாவது மகரசங்கராந்தி துவங்கி, மகா சிவராத்திரி வரை இந்த விழா நடைபெறும். இதில் கலந்து கொண்டு புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் லட்சக்கணக்கானவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.


இதில் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி பிரதமர் மோடியும் கலந்து கொண்டு புனித நீராட உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வசந்த பஞ்சமி, அமாவாசை போன்ற நாட்கள் தான் சிறப்புக்குரியதாக சொல்லப்படும். ஆனால் அஷ்டமி தினமான பிப்ரவரி 5ம் தேதியை பிரதமர் மோடி புனித நீராட தேர்வு செய்தது ஏன் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன. 




பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அஷ்டமி திதியில் வருகிறது. இது குப்ர நவராத்திரி காலமாகும். திதிகளில் அஷ்டமி திதிக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. இத பலருக்கும் தெரிவது கிடையாது. அதாவது, தவம், தியானம், ஆன்மிக பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் பலன் தரக் கூடிய நாள் இந்த அஷ்டமி திதியாகும். இந்த நாளில் புனித நீராடுவது, வழிபடுவது, தான தர்மங்கள் செய்வது ஆகியன மிகவும் விசேஷ பலன்களை தரக் கூடியதாகும். அஷ்டமி திதியில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆன்மிக பலத்தை அதிகரிக்க செய்து, நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடிய சக்தி வாய்ந்த நாளாகும்.


பிப்ரவரி 5ம் தேதியில் வரும் தை மாத அஷ்டமியை பீஷ்ம அஷ்டமி என்றும் சொல்லுவது உண்டு. மகாபாரதத்தில், பிதாமகன் என போற்றப்படும் பீஷ்மர், அர்ஜூனன் எய்திய முள் படுக்கையில் கிடந்த போது சூரிய பகவான் உத்திராயண காலத்தில், வளர்பிறையில் பயணிக்க துவங்கும் நாளுக்காக தான் காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. வளர்பிறை அஷ்டமி திதியில் தான் கிருஷ்ணர், பீஷ்மர் முன் தோன்றி, அவருக்கு மோட்சம் அளித்ததாக சொல்லப்படுகிறது. அதவால் இதை மகா அஷ்டமி என்றும் சொல்லுவதுண்டு.


மகா அஷ்டமியில் புனித நதிகளில் நீராடி, முன்னோர்களுக்கு பித்ரு தர்பணம் செய்வது மிகப் பெரிய புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்களுக்கு மோட்ச கதி கிடைப்பதுடன், நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்