டெல்லி: புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்திற்கு திடீரென பிரதமர் நரேந்திர மோடி விசிட் அடித்து நடந்து வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற வளாகம் பிரமாண்டமான முறையில் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தற்போது கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவுறும் நிலைக்கு வந்து விட்டன. கடைசிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்தை டாடா புராஜக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மிகப் பெரிய நாடாளுமன்ற அரங்கம், நூலகம், பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், இந்தியா ஹவுஸ் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், டைனிங் அறைகள், மிகப் பெரிய பார்க்கிங் என சகல வசதிகளுடன் அதி நவீனமாக இது உருவாகி வருகிறது.

உலகத் தரம் வாய்ந்த நாடாளுமன்ற வளாகமாக இது உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகளின் கடைசிக் கட்ட நிலவரத்தை நேரில் அறிய விரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து திடீரென அவர் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். அவருடன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் வந்திருந்தார். பெரிய அளவில் கூட்டம் சேர்க்காமல் சிம்பிளாக வந்த பிரதமரைப் பார்த்து கட்டுமானப் பணியில் கவனமாக இருந்த பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பணிகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். சந்தேகங்களையும் அவர் கேட்டார். பின்னர் ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் சற்று தாமதமாகி விட்டது. ஆனால் விரைவில் புதிய வளாகம் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}