டெல்லி: புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்திற்கு திடீரென பிரதமர் நரேந்திர மோடி விசிட் அடித்து நடந்து வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற வளாகம் பிரமாண்டமான முறையில் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தற்போது கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவுறும் நிலைக்கு வந்து விட்டன. கடைசிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்தை டாடா புராஜக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மிகப் பெரிய நாடாளுமன்ற அரங்கம், நூலகம், பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், இந்தியா ஹவுஸ் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், டைனிங் அறைகள், மிகப் பெரிய பார்க்கிங் என சகல வசதிகளுடன் அதி நவீனமாக இது உருவாகி வருகிறது.

உலகத் தரம் வாய்ந்த நாடாளுமன்ற வளாகமாக இது உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகளின் கடைசிக் கட்ட நிலவரத்தை நேரில் அறிய விரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து திடீரென அவர் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். அவருடன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் வந்திருந்தார். பெரிய அளவில் கூட்டம் சேர்க்காமல் சிம்பிளாக வந்த பிரதமரைப் பார்த்து கட்டுமானப் பணியில் கவனமாக இருந்த பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பணிகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். சந்தேகங்களையும் அவர் கேட்டார். பின்னர் ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் சற்று தாமதமாகி விட்டது. ஆனால் விரைவில் புதிய வளாகம் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}