டெல்லி: புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்திற்கு திடீரென பிரதமர் நரேந்திர மோடி விசிட் அடித்து நடந்து வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற வளாகம் பிரமாண்டமான முறையில் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தற்போது கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவுறும் நிலைக்கு வந்து விட்டன. கடைசிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்தை டாடா புராஜக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மிகப் பெரிய நாடாளுமன்ற அரங்கம், நூலகம், பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், இந்தியா ஹவுஸ் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், டைனிங் அறைகள், மிகப் பெரிய பார்க்கிங் என சகல வசதிகளுடன் அதி நவீனமாக இது உருவாகி வருகிறது.
உலகத் தரம் வாய்ந்த நாடாளுமன்ற வளாகமாக இது உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகளின் கடைசிக் கட்ட நிலவரத்தை நேரில் அறிய விரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து திடீரென அவர் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். அவருடன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் வந்திருந்தார். பெரிய அளவில் கூட்டம் சேர்க்காமல் சிம்பிளாக வந்த பிரதமரைப் பார்த்து கட்டுமானப் பணியில் கவனமாக இருந்த பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பணிகளையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். சந்தேகங்களையும் அவர் கேட்டார். பின்னர் ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் சற்று தாமதமாகி விட்டது. ஆனால் விரைவில் புதிய வளாகம் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}