சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விடுகிறார். அவருக்கு பதில் சொல்வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது கூறுகையில், தொழிலதிபர் அதானி விவகாரம் தொடர்பாக துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே சொல்லிட்டாரு, நீங்க டிவிஸ்ட் பண்ணாதீங்க. பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேற வேலை இல்ல, அதனால் தினமும் ஒரு அறிக்கை கொடுத்துட்டு இருப்பாரு. அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மழை வருகிறது என எதிர்பார்க்கிறோமோ இல்லையோ, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உரிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல வாரியாக தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட்டு, என்ன செய்யப்போகிறோம் என்று தீர்மான போட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் பேச இருக்கிறோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}