சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விடுகிறார். அவருக்கு பதில் சொல்வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது கூறுகையில், தொழிலதிபர் அதானி விவகாரம் தொடர்பாக துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே சொல்லிட்டாரு, நீங்க டிவிஸ்ட் பண்ணாதீங்க. பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேற வேலை இல்ல, அதனால் தினமும் ஒரு அறிக்கை கொடுத்துட்டு இருப்பாரு. அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மழை வருகிறது என எதிர்பார்க்கிறோமோ இல்லையோ, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உரிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல வாரியாக தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களை கூப்பிட்டு, என்ன செய்யப்போகிறோம் என்று தீர்மான போட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் பேச இருக்கிறோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்
ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!
வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது
முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம்: செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி.. அனைத்து விலைகளும் உயரும் அபாயம்!
வின்டோஸ் அப்டேட் குழப்பத்தால்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து.. சேவைகளில் தாமதம்
அமெரிக்காவை அதிர வைக்கும் Bomb Cyclone.. பல ஊர்களை பனி மூடியது!
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்
ரூ. 93,000க்கு வாங்கிய காரின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}