திருப்பள்ளி எழுக!

Jun 29, 2026,12:47 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


முடிந்தது இரவு !

விடிந்தது காலை ! 

திருப்பள்ளி எழுக! 

என் திரிபுரசுந்தரி! 


கதிரவன் வருகிறான்!

காரிருள் மறைந்தது!

திருப்பள்ளி எழுக!

என் திருவுளத் தேவி!


கழனியில் உழுதிட 

உழவர்கள் செல்கிறார்! 

திருப்பள்ளி எழுக! 

திருமகள் லட்சுமி!




காப்பிக்குக் கடுந்தவம் 

இருக்கிறான் கணவன்! 

திருப்பள்ளி எழுக! 

அவன் அன்புத் தேவி!


பள்ளியில் பயிலும்

குழந்தைகள் தேடும்!

திருப்பள்ளி எழுக!

என் கலைமகள் சரஸ்வதி! 


வாடிய நாட்கள் 

ஓடிட வேண்டும் 

திருப்பள்ளி எழுக! 

உயர்ந்த என் உத்தமி! 


ஏழைகள் வாழ 

இயன்றதைச் செய்வோம்!

திருப்பள்ளி எழுக!-என் 

திருமதி சூர்யா! 


மண்ணுயிர் எல்லாம் 

இன்னுயிர் வாழ 

திருப்பள்ளி எழுக! 

என்னவளே! இனியவளே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்