- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
முடிந்தது இரவு !
விடிந்தது காலை !
திருப்பள்ளி எழுக!
என் திரிபுரசுந்தரி!
கதிரவன் வருகிறான்!
காரிருள் மறைந்தது!
திருப்பள்ளி எழுக!
என் திருவுளத் தேவி!
கழனியில் உழுதிட
உழவர்கள் செல்கிறார்!
திருப்பள்ளி எழுக!
திருமகள் லட்சுமி!

காப்பிக்குக் கடுந்தவம்
இருக்கிறான் கணவன்!
திருப்பள்ளி எழுக!
அவன் அன்புத் தேவி!
பள்ளியில் பயிலும்
குழந்தைகள் தேடும்!
திருப்பள்ளி எழுக!
என் கலைமகள் சரஸ்வதி!
வாடிய நாட்கள்
ஓடிட வேண்டும்
திருப்பள்ளி எழுக!
உயர்ந்த என் உத்தமி!
ஏழைகள் வாழ
இயன்றதைச் செய்வோம்!
திருப்பள்ளி எழுக!-என்
திருமதி சூர்யா!
திருப்பள்ளி எழுக!
என்னவளே! இனியவளே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!
குறுங்கதை.. ரகசியம் பலித்ததோ?
இணைய வகுப்பு
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்
நவசமாஜ் மகளிர் மேடையின் 3ம் ஆண்டு தொடக்க விழா.. சாதனை மாணவிகளுக்கு கெளரவம்
திருப்பள்ளி எழுக!
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!
மிளகுத்தக்காளி என்ற மணத்தக்காளி
Short Story: தபால் பெட்டி
{{comments.comment}}