- புலவர் ப. ஈஸ்வரநாதன்
கொஞ்ச காலம்
இருப்போம்
மறவாதே
இருக்கும் காலம்
நிம்மதியை
இழக்காதே
நிறைய இருக்கிறது
என்றே ஆடாதே
எதுவும் இல்லை
என்பதால் வாடாதே

ஒன்றை தொலைத்தபின்
நின்று தேடாதே
மதிக்காதார் வாசலுக்கு
எப்போதும்
போகாதே
உதவி செய்தவர்களை
என்றென்றும்
மறக்காதே
உண்மையான
உறவுகளை ஒருபோதும்
ஒதுக்காதே
மகத்தான மாற்றம் வாழ்வில் உண்டு
இன்றும் என்றும்
மனம் தளராதே
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}