பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா?....சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் துவங்கிடுச்சு

Jan 04, 2025,07:12 PM IST

சென்னை: சென்னை சென்ட்ரல் டூ நாகர்கோவில், மற்றும் தாம்பரம் டூ கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் என சொல்லக்கூடிய பொங்கல் பண்டிகை உழவுத் தொழிலுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில்  மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் பொங்கல் பண்டிகை மற்றும் அதனை ஒட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறை விடப்படுகிறது.

இந்த விடுமுறை நாட்களில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். அந்த சமயத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பேருந்து மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் அலைமோதுவது வழக்கம். மேலும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிப்பதற்காகவும், தென் மாவட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் பயணம் செல்வதாலும், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் டூ கன்னியாகுமரி, மற்றும் சென்னை சென்ட்ரல் டூ நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தாம்பரம் டூ கன்னியாகுமரி: 



ஜனவரி 13ஆம் தேதி இரவு 10.30மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் (06093) மறுநாள் மதியம் 12:30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும்.

ஜனவரி 14ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில்(06094), மறுநாள் அதிகாலை ஆறு 15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில், வழியாக இயக்கப்படுகின்றன.


சென்னை சென்ட்ரல் டூ நாகர்கோவில்:

ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்படும் ரயில்(06089) மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

 ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில்(06090), மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். 

இந்த ரயில்கள் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, வழியாக இயக்கப்படுகின்றன என அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

news

ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?

news

தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி

news

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

news

ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்

news

ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!

news

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!

news

எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

அதிகம் பார்க்கும் செய்திகள்