சென்னை: சென்னையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவர்களை வெளியே பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடந்து கொண்ட துணை நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியாருக்கு பூந்தமல்லி கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
சென்னை குன்றத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் சென்றதைப் பார்த்த ரஞ்சனா நாச்சியார், பஸ்ஸை வழிமறித்து நிறுத்தி டிரைவருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர்களை திட்டி வெளியே இழுத்து விட்டார். ஒரு சிறிய பையனை தலையிலேயே சரமாரியாக அடித்தார். அந்தப் பையன் இத்தனைக்கும் உள்ளே நின்று கொண்டிருந்தவன் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர் கண்டக்டரைப் பார்த்து அறிவு கெட்ட நாயே நாயே என்று திரும்பத் திரும்பத் திட்டினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 5 பிரிவுகளின் கீழ் ரஞ்சனா மீது வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் பூந்தமல்லி கோர்ட்டில் நீதிபதி ராம்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது ரஞ்சனா சார்பில் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. அதில் 2 குழந்தைகளுக்குத் தாய் ரஞ்சனா. தனது பிள்ளைகள் போல நினைத்துத்தான் இப்படி நடந்து கொண்டார், அடித்தார், திட்டினார். அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த நீதிபதி, ஒரு தாய் இப்படித்தான் பிள்ளைகளைத் திட்டுவாரா என்று கேட்டார். பின்னர் 40 நாட்கள் தினசரி காலை, மாலை இரு நேரம் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}