தன்னம்பிக்கை தந்த வெற்றி.. ஒரு நிமிடக் கதை (4)

Mar 30, 2026,05:08 PM IST

- பூரணவள்ளி சேகர்


கண்ணன் ஓரளவு புத்திசாலி. ஆனால் அவன் கறுத்த நிறமும், சீரற்ற முக அமைப்பும் காரணமாக, பலர் அவனைத் தவிர்த்து நடந்தனர். வகுப்பில் சில மாணவர்களே அவனுடன் பழகினர். இதனால், கண்ணன் அடிக்கடி தனிமையை உணர்ந்தான்.


அவனின் பெற்றோர் மட்டுமே அவனை அன்புடன் அணைத்துக் கொண்டனர்; உடன் பிறந்தவர்களுக்குக் கூட, அவனைப் பற்றிய எண்ணம் உயரமாக இருக்கவில்லை.


“ஒருநாள் என் பெயர் செய்தித்தாளில் பெரிதாக வர வேண்டும்… அனைவரும் என்னைப் பாராட்ட வேண்டும்…” — இந்த எண்ணமே கண்ணனின் உள்ளத்தில் அடிக்கடி முளைத்தது.


காலம் கடந்து சென்றது. வயதோடு அவனின் மனமும், எண்ணங்களும் மாற்றமடைந்தன. தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அவனை முன்னேற்றியது. தன் தோற்றத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடன், கண்ணன் மும்பை நகரத்திற்குச் சென்று பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டான்.


அந்த மாற்றம் அவனுக்கு வெளிப்புற அழகை மட்டும் அல்லாமல், உள்ளார்ந்த நம்பிக்கையையும் தந்தது. அவன் மனம் இப்போது அமைதியுடனும் உற்சாகத்துடனும் நிரம்பியது.




சித்திரை மாதம் வந்தது. சித்திரை பௌர்ணமி திருவிழா நகரமெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் ஒரு சிறப்பாக, “அழகிப் போட்டி” நடைபெற்றது.


பலர் பங்கேற்ற அந்தப் போட்டியில், அனைவரையும் கவர்ந்த ஒரு அழகியர் முதலிடம் பெற்றார் — அவரது பெயர் கவிஷ்கா.


அடுத்த நாள், அனைத்து நாளிதழ்களிலும் கவிஷ்காவின் வெற்றி செய்தி பெரிதாக வெளியானது. அந்தப் புகைப்படத்தை பார்த்து கண்ணன் மகிழ்ச்சியில் மூழ்கினான்…


ஏனெனில், அந்த “கவிஷ்கா” யாருமல்ல —

தன் தோற்றத்தையும், தன்னம்பிக்கையையும் மாற்றிக் கொண்டு ஏற்றுக் கொண்ட  கண்ணனே!


ஒருகாலத்தில் தன்னை ஏளனமாகப் பார்த்த உலகமே, இன்று அவனை பாராட்டுகிறது.


“அழகு என்பது தோற்றத்தில் மட்டும் இல்லை; அது தன்னம்பிக்கையிலும், மன உறுதியிலும் உள்ளது” என்பதை கண்ணன் தனது வாழ்க்கையால் நிரூபித்தான்.  கவிஷ்கா அரசாங்கத் தேர்விலும் தேர்ச்சி பெற்று அரசாங்கப் பணியில் சேர்ந்தாள்.


(ப.பூரணவள்ளி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்,

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்