மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Apr 21, 2025,06:37 PM IST

வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைந்து விட்டார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாடிகன் சிட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 


88 வயதான போப்பாண்டவர் பிரான்சிஸ், வாடிகன் சிட்டியில் உள்ள தனது அதிகாரப்பூ்ாவ போப் இல்லத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் சிகிச்சை பெற்று வந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ். ஈஸ்டர் தினத்தையொட்டி நடந்த பிரார்த்தனையின்போதும் கூட அவர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியிருந்தார்.


உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணியளவில் போப்பாண்டவர் மரணமடைந்ததாக கார்டினால் கெவின் பாரல் அறிவித்துள்ளார். கடவுளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த போப்பாண்டவர் நம்மிடிருந்து பிரிந்து விட்டார். இயேசுவின் உண்மையான சீடராக கடைசி வரை திகழ்ந்தவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.




கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போப்பாண்டவர். பல நாட்கள் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. படிப்படியாக நிலைமை மோசமாகியும் வந்தது. அவருக்கு நிமோனியா பிரச்சினை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 38 நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில், பின்னர் வாடிகன் இல்லத்திற்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது இறுதிச் சடங்குகளை மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என்று போப்பாண்டவர் கேட்டுக் கொண்டிருப்பதாக கார்டினால்கள் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இறுதிச் சடங்கு நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது.


போப்பாண்டவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்