மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Apr 21, 2025,06:37 PM IST

வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைந்து விட்டார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாடிகன் சிட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 


88 வயதான போப்பாண்டவர் பிரான்சிஸ், வாடிகன் சிட்டியில் உள்ள தனது அதிகாரப்பூ்ாவ போப் இல்லத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் சிகிச்சை பெற்று வந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ். ஈஸ்டர் தினத்தையொட்டி நடந்த பிரார்த்தனையின்போதும் கூட அவர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியிருந்தார்.


உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணியளவில் போப்பாண்டவர் மரணமடைந்ததாக கார்டினால் கெவின் பாரல் அறிவித்துள்ளார். கடவுளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த போப்பாண்டவர் நம்மிடிருந்து பிரிந்து விட்டார். இயேசுவின் உண்மையான சீடராக கடைசி வரை திகழ்ந்தவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.




கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போப்பாண்டவர். பல நாட்கள் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. படிப்படியாக நிலைமை மோசமாகியும் வந்தது. அவருக்கு நிமோனியா பிரச்சினை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 38 நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில், பின்னர் வாடிகன் இல்லத்திற்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது இறுதிச் சடங்குகளை மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என்று போப்பாண்டவர் கேட்டுக் கொண்டிருப்பதாக கார்டினால்கள் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இறுதிச் சடங்கு நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது.


போப்பாண்டவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்