பி.ஆர். ஹெலன்
திருமணம்
திரு என்ற அடைமொழியுடன்
இரு மனம் இணையும் திருமணம்
மணமகனோ வரும் (வந்திணையும்) திருமதி குறித்த கலக்கத்துடன்
இயல்பு வாழ்க்கையது
மாறப் போகும் நடுக்கத்துடன்
மணமகனின் பெற்றோருக்கோ
குலமகளின் வருகைக்கான எதிர்பார்ப்புடன்
மணமகளின் பெற்றோருக்கோ
அன்பு மகளின் எதிர்காலம் குறித்த கனவுடன்

ஒவ்வொடு மணங்களிலும்.
ஒவ்வொடு எதிர்பார்ப்பு இருந்தும்
பலர் மனம் வாழ்ந்த
இரு மனங்களின் சங்கமிப்பு மட்டுமே
திருமணம்
--
குழந்தை
அன்புடன் நீ பார்க்கும் பார்வையில்
பரவசமடைகின்றேன்
அழகுடன் நீ சிரிக்கும் சிரிப்பில்
சிறகடிக்கின்றேன்.
கட்டியணைத்து நீ முத்தமிடுகையில்
கண்களில் ஈரமதை ஏந்துகின்றேன்.
உன் பார்வை உன் சிரப்பு உன் முத்தம்.
மொத்தமுமாய் என்னை இழக்கின்றேன்.
ஓஓ
என் குழந்தையின் குழந்தையல்லவா நீ
(P.R. ஹெலன், கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்ப்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.மிகுந்த திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும், நேர்மையும் கொண்ட ஒரு சிறந்த ஆசிரியர். ஏராளமான தமிழ்க் கவிதைகளை இயற்றியுள்ளார். இவர் கற்பித்த பாடத்தில் SSLC தேர்வில் 100 சதவீத தேர்ச்சி முடிவை (Centum result) பெற்றுத் தந்துள்ளார்)
மசோதாக்களை நிறைவேற விட மாட்டோம் - தொகுதி மறுவரையறைக்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு
ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி
கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு
தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!
“நாம் பேசும் AI… யார் அவர்கள்?”.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை
Nadavavi Kinaru: காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய நடவாவி கிணறு .. அப்படீன்னா என்ன?
வெப்பமே என் வெப்பமே...!
Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி
Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!
{{comments.comment}}