கூட்டணி அமைத்தால் மட்டும் போதாது.. பாஜகவை வீழ்த்த இது தேவை.. பி.கே. அட்வைஸ்!

Mar 21, 2023,12:22 PM IST

டெல்லி: பாஜகவுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்தால் மட்டும் போதாது. அதை மட்டும் வைத்துக் கொண்டு பாஜகவை வீழ்த்த முடியாது. மாறாக, பாஜகவின் பலம் என்ன என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். அதை உணர்ந்து திட்டம் தீட்டி செயல்பட்டால் மட்டுமே பாஜகவை வீழ்த்துவது குறித்து நினைத்துப் பார்க்கலாம் என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.


பாஜகவுக்கு எதிரான பிரமாண்டக் கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன. முக்கியமான எதிர்க்கட்சிகள் இணைந்து ஓரணியாக திரண்டால் நிச்சயம் பாஜகவை வீழ்த்தி விடலாம், 2024ல் பாஜகவுக்கு கடும் நெருக்கடியைத் தரலாம் என்று முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.


ஆனால் அது மட்டும் பாஜகவை வீழ்த்த போதாது என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார். இவர்தான் நரேந்திர மோடி பிரதமராக வருவதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர். மோடி தலைமையிலான முதல் பாஜக அரசு மத்தியில் ஆட்சியைப் பிடிக்க பிரஷாந்த் கிஷோர்தான் வியூகம் வகுத்துக் கொடுத்த பிதாமகன் என்பது நினைவிருக்கலாம்.



பாஜகவுக்கு எதிரான வியூகம் குறித்து பிரஷாந்த் கிஷோர் NDTVக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கொள்கை ரீதியாக பிரிந்து கிடப்பவர்கள் தேர்தலுக்காக இணைவதில் எந்த பலனும் கிடைக்காது. அப்படிப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் எந்த லாபமும் கிடைக்காது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது பலவீனமாக இருக்கிறது. வெறுமனே கட்சிகளும், தலைவர்களும் இணைந்தால் மட்டும் போதாது.


பாஜகவுடன் மோத வேண்டுமானால் அதன் பலங்களை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்துத்வா, தேசியவாதம், நல அரசியல்.. இதுதான் பாஜகவின் முக்கியமான தூண்களாக உள்ளது. இதை உடைக்க வேண்டும். குறைந்தது இரண்டையாவது உடைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பாஜகவை எதிர்க்க முடியும்.


இந்துத்வா கொள்கைக்கு எதிராக காந்தியவாதிகள், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரியவாதிகள் என சகல தரப்பினரும் ஒரே கொள்கையுடன் திரள வேண்டும். மாறாக யார்  யாருடன்  பேசுகிறார்கள்..யார் விருந்து வைக்கிறார்கள்.. யாருடன் யார் டீ சாப்பிடுகிறார்.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது. மாறாக கொள்கை உருவாக்கம் வேண்டும். கொள்கை அடிப்படையில் அனைவரும் இணைய வேண்டும்.  அதுவரை பாஜகவை வீழ்த்த முடியாது. அந்த வகையில் பார்த்தால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் பாஜகவை வீழ்த்தும் சக்தியைப் பார்க்க முடியவில்லை.


ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோதோ யாத்திரையால் என்ன லாபம் கிடைத்தது என்பது இதுவரை தெரியவில்லை.  ஆறு மாத காலம் அவர் மேற்கொண்ட யாத்திரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது, விமர்சனங்களும் கூடவே வந்தது. ஆனால் ஆறு மாதத்திற்குப் பிறகு ஏதாவது மாற்றம் இருக்க வேண்டும் அல்லவா.. ஆனால் அப்படி எந்த மாற்றத்���ையும் என்னால் காண முடியவில்லை.  தேர்தலின்போதுதான் யாத்திரைக்கு பலன் கிடைத்ததா என்பதை நாம் அறிய முடியும் என்றார் பிரஷாந்த் கிஷோர்.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்