ராஜ்யசபா சீட்கண்டிப்பாக எங்களுக்கு உண்டு.. அதிமுகவுடன் ஒப்பந்தமே போட்டிருக்கோம்..பிரேமலதா விஜயகாந்த்

Feb 12, 2025,01:39 PM IST

சென்னை: ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுகவுடன் ஒப்பந்தமே போடப்பட்டுள்ளது. எனவே தேமுதிக வேட்பாளர் யார் என்பதை விரைவில் முடிவு செய்வோம் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது தேமுதிக. அதற்கு முந்தைய சட்ட.சபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடம் பெற்ற கூட்டணியில் தேமுதிக இருந்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போதே ராஜ்யசபா சீட்டையும் அதிமுகவிடம் கேட்டிருந்தது தேமுதிக. ஆனால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதா எந்த அறிவிப்பையும் அதிமுக அப்போது வெளியிடவில்லை.

இந்த நிலையில் வருகிற ஜூலை மாதம் தமிழ்நாட்டில் உள்ள 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம்  முடிவடைகிறது. இதில் அதிமுக சார்பில் 2 பேரைத் தேர்ந்தெடுக்க முடியும். திமுக சார்பில் 4 பேரை தேர்வு செய்ய முடியும். அதிமுக சார்பில் காலியாகும் 2 இடங்களிலும் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒரு சீட் தருமா என்ற கேள்வி எழுந்தது. காரணம், நீண்ட காலமாகவே கூட்டணிக் கட்சிகளிடம் ராஜ்யசபா சீட் கேட்டு வருகிறது தேமுதிக. ஆனால் யாருமே இதுவரை தந்தது கிடையாது.



இந்த நிலையில் வருகிற ராஜ்யசபா தேர்தலிலாவது தேமுதிகவுக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதிமுகவுடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாக தற்போது பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இன்று  சென்னையில் செய்தியாளர்களிடையே அவர் பேசுகையில், ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு மட்டும் நடத்தவில்லை. ஒப்பந்தமே போடப்பட்டுள்ளது. எனவே தேமுதிக சார்பில் யார் போட்டியிடுவது என்பதை விரைவில் முடிவு செய்வோம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

இதனால் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் போட்டியிடும் என்று தெரிகிறது. ஆனால் அதிமுக தரப்பு இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அவர்கள் அறிவிக்காமல், பிரேமலதா விஜயகாந்த்தே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

ஒரு வேளை ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக போட்டியிட்டால் வேட்பாளராக யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய பிரபாகரன் ஏற்கனவே விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றுள்ளார். எனவே அவருக்கு மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் சீட் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தனது தம்பி சுதீஷுக்கு சீட் தருவாரா பிரேமலதா விஜயகாந்த் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

news

அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு

news

விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

news

சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

news

Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!

news

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!

news

ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து

news

அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா

news

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?

அதிகம் பார்க்கும் செய்திகள்