கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

Aug 29, 2025,09:15 PM IST

தூத்துக்குடி: கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். மக்கள் பிரச்சனையை கேளுங்கள். அரசியல் என்பது மக்களுக்காகத்தான். ஆட்சி என்பதும் மக்களுக்காகத்தான். மக்கள் நலமாக இருந்தால்தான் இந்த நாடே நன்றாக இருக்கும் என்று விஜய் குறித்த கேள்விக்கு காட்டமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடக்கிறது. அரசியலில் மட்டுமல்ல, தேர்தலிலும் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. கண்கூடாகவே ஓட்டுக்கு காசு கொடுப்பது  நடக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால், பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். கூட்டணி ஆட்சி கண்டிப்பா தமிழ்நாட்டில் வரணும். தேர்தல் ஆணையமும், நீதிபதிகளும் ஜனநாயக நாட்டில் நேர்மையான, முறையான தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான், நாங்கள் தேர்தலில் நிற்பதற்கே ஒரு அர்த்தம் இருக்கும். 




2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தென் மாவட்டங்களுக்கு உள்ளம் தேடி, இல்லம் நாடி கேப்டன் ரதம் விரைவில் வரவுள்ளது. மக்கள் மத்தியில் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. கூட்டணி பற்றி எல்லாம் நீங்களாக கற்பனை செய்துகொண்டால் நான் பதில் சொல்ல முடியாது. நாங்கள் எங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் அதுபற்றி நாங்களே அறிவிப்போம். தவெக குறித்த  கேள்வியைத் தவிர வேறு கேள்வியே இல்லையா. 


தமிழகம் முழுவதும் தினமும் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். இந்த ஒரு கேள்வியைத் தவிர வேறு கேள்வியை கேட்பதில்லை. நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்?. மக்கள் பிரச்சனையை பேசுங்க உப்பளத் தொழிலாளர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கப்பல் தளம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் என எத்தனையோ இருக்கின்றன. 


பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்கிறோம். நீங்கள் ஏன் மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர மறுக்கிறீர்கள்?. கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். மக்கள் பிரச்சனையை கேளுங்கள். அரசியல் என்பது மக்களுக்காகத்தான். ஆட்சி என்பதும் மக்களுக்காகத்தான். மக்கள் நலமாக இருந்தால்தான் இந்த நாடே நன்றாக இருக்கும். இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!

news

கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!

news

அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!

news

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!

news

புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

news

ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்