ஆரோவில்லில் குடியரசுத் தலைவர்.. ஸ்ரீ அரவிந்தர் 150வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பு!

Aug 08, 2023,03:57 PM IST
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று ஆரோவில் சென்றார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ளார். இன்று அவர் ஆரோவில் சென்றார். அங்கு ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஆசிரமம் குறித்து நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.

பிந்னர் ஆரோவில் மாத்ரி மந்திர் மையத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற ஆன்மீகக் கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளில் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக, ஆரோவில் சென்ற குடியரசுத் தலைவரை ஆரோவில் செயலர் திருமதி ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

நேற்று புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த புதிய ரேடியோகிராபி கருவி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அதேபோல திருக்காஞ்சி கோவில் கலை, கைவினைப் பொருள் கிராமத்திற்கும் சென்று சுற்றிப் பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!

news

முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?

news

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்

news

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?

news

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை

news

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!

news

விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!

news

சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்

news

மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்

அதிகம் பார்க்கும் செய்திகள்