ஆரோவில்லில் குடியரசுத் தலைவர்.. ஸ்ரீ அரவிந்தர் 150வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பு!

Aug 08, 2023,03:57 PM IST
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று ஆரோவில் சென்றார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ளார். இன்று அவர் ஆரோவில் சென்றார். அங்கு ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஆசிரமம் குறித்து நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.

பிந்னர் ஆரோவில் மாத்ரி மந்திர் மையத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற ஆன்மீகக் கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளில் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக, ஆரோவில் சென்ற குடியரசுத் தலைவரை ஆரோவில் செயலர் திருமதி ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

நேற்று புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த புதிய ரேடியோகிராபி கருவி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அதேபோல திருக்காஞ்சி கோவில் கலை, கைவினைப் பொருள் கிராமத்திற்கும் சென்று சுற்றிப் பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்