ஆரோவில்லில் குடியரசுத் தலைவர்.. ஸ்ரீ அரவிந்தர் 150வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பு!

Aug 08, 2023,03:57 PM IST
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று ஆரோவில் சென்றார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ளார். இன்று அவர் ஆரோவில் சென்றார். அங்கு ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஆசிரமம் குறித்து நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.

பிந்னர் ஆரோவில் மாத்ரி மந்திர் மையத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற ஆன்மீகக் கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளில் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக, ஆரோவில் சென்ற குடியரசுத் தலைவரை ஆரோவில் செயலர் திருமதி ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

நேற்று புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த புதிய ரேடியோகிராபி கருவி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அதேபோல திருக்காஞ்சி கோவில் கலை, கைவினைப் பொருள் கிராமத்திற்கும் சென்று சுற்றிப் பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்திற்கு இப்போதே தேர்தல் பொறுப்பாளரை நியமித்த பாஜக.. மாஸ்டர் பிளான் என்னவோ!

news

போர்க்கொடி உயர்த்தும் கூட்டணி கட்சிகள்.. பொறுமை காக்கும் திமுக.. காத்திருக்கும் அதிமுக!

news

திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு... அக்டோபர் 30ல் தீர்ப்பு: குடும்ப நல நீதிமன்றம்

news

ஸ்டிராங் ஆன எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்பட்டாரா கே.ஏ.செங்கோட்டையன்.. என்ன திட்டம்?

news

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

news

தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

news

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கில் கேப்டன்!

news

5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்