ஆரோவில்லில் குடியரசுத் தலைவர்.. ஸ்ரீ அரவிந்தர் 150வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பு!

Aug 08, 2023,03:57 PM IST
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று ஆரோவில் சென்றார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ளார். இன்று அவர் ஆரோவில் சென்றார். அங்கு ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஆசிரமம் குறித்து நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.

பிந்னர் ஆரோவில் மாத்ரி மந்திர் மையத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற ஆன்மீகக் கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளில் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக, ஆரோவில் சென்ற குடியரசுத் தலைவரை ஆரோவில் செயலர் திருமதி ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

நேற்று புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த புதிய ரேடியோகிராபி கருவி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அதேபோல திருக்காஞ்சி கோவில் கலை, கைவினைப் பொருள் கிராமத்திற்கும் சென்று சுற்றிப் பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

சஞ்சு சாம்சனை பேசாம கேப்டனாக்குங்கப்பா.. செமயா சூப்பரா இருக்கும்.. சொல்கிறார் ஸ்ரீகாந்த்!

news

நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்

news

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்

news

தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!

news

ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!

news

திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!

news

32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!

news

புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது

அதிகம் பார்க்கும் செய்திகள்