டெல்லி: மறைந்த போப் ஆண்டவர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும் நிலையில், அவரின் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்று நாள் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த ஏப்ரல் 21 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் இறப்பு செய்தி கேட்டு உலக நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தது.
போப் பிரான்சிஸ் உடல் தற்போது வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு வரை 2 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸ் உடலில் செயிண்ட் மேரி மேஜரில் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் நகரத்திற்கு வருகை தருகின்றனர். அதேபோல்
இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் நேற்று வாடிகன் சென்றனர். இன்று போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இதயராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுவதால் இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}