திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி.. 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு

Jan 02, 2024,10:27 AM IST

திருச்சி:  பிரதமர் நரேந்திர மோடி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தற்போது வந்துள்ளார். அங்கு தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


முன்னதாக திருச்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றார்கள்.


இதைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில் அவர் ரூ. 19,850 கோடி யிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார், பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.




பிரதமரின் பயணத்தில் முக்கியமானது ரூ. 1100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத் திறப்பு விழாதான். சர்வதேச தரத்திற்கு இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார். ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டுக்கு வருவது குறித்து பிரதமர் மோடி டிவீட் போட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் திருச்சியில் எனது 2 நாள் பயணத்தைத் தொடங்குகிறேன். அங்கு பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் பேசவுள்ளேன். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தைத் தொடங்கி வைக்கவுள்ளேன். பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவுள்ளேன். இது மக்களுக்குப் பயன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.


3 அடுக்கு பாதுகாப்பு


பிரதமர் வருகையைத் தொடர்ந்து திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி பஸ் நிலையம், ரயில் நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்வோர் விமான நிலையப் பாதையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விராலிமலை வழியாக அவர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பிரதமர் பயணம் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை அறிய Live page  உடன் இணைந்திருங்கள்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்