டெல்லி: வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்ற எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். இதனை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நாடாளுமன்ற எம்பியாக பிரியங்கா காந்தி சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே ராகுல் காந்தி மக்களவை எம்பி மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வரும் நிலையில் சகோதரி பிரியங்கா காந்தியும் எம்பியாக வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து ஒருவர் ஒரு தொகுதியில் மட்டும் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர்.
அத்தொகுதி காலியானதை தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23ஆம் தேதி எண்ணப்பட்டன.இதில் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று, 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். ஏற்கனவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று சாதனை படைத்தார் என்ற பெருமையை படைத்துள்ளார் பிரியங்கா காந்தி.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற எம்பியாக பதவி ஏற்றுக் கொண்டா் பிரியங்கா காந்தி. அரசியல் சாசன நூலின் பிரதியை கையில் உயர்த்திப் பிடித்தபடி பதவியேற்றுக் கொண்டார் பிரியங்கா காந்தி. கேரள பெண்கள் அணிவதைப் போல பாரம்பரிய சேலையை அவர் அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தலைவர்கள், காங்கிரஸ், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}