மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக தமன்னா...கர்நாடகாவில் கிளம்பும் கடும் எதிர்ப்பு

May 23, 2025,01:01 PM IST

பெங்களூரு : பிரபல நடிகை தமன்னா பாட்டியா, மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன. 6.2 கோடி ரூபாய் செலவில் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பது சரியல்ல என்று கன்னட ரக்ஷண வேதிகே (KRV) தலைவர் நாராயண கவுடா கூறியுள்ளார். கன்னட நடிகைகளை விட்டுவிட்டு, பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுத்தது கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.


மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக தமன்னா பாட்டியா நியமிக்கப்பட்டது குறித்து பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், யுவ கர்நாடகா வேதிகே என்ற அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. ரூபேஷ் ராஜண்ணா தலைமையிலான இந்த அமைப்பினர், சாண்டல் சோப் தொழிற்சாலையின் தலைவரை சந்திக்க முடிவு செய்துள்ளனர். சந்திப்புக்கு முன்பு, தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான கன்னட ஆர்வலர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட உள்ளனர். தமன்னாவை விளம்பர தூதராக நியமித்தால், சோப்பை வாங்க மாட்டோம் என்று வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.




மைசூர் சோப்ஸ் மற்றும் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், தமன்னா பாட்டியாவை விளம்பர தூதராக நியமிக்க 6.2 கோடி ரூபாய் கொடுத்திருப்பது சரியல்ல என்று நாராயண கவுடா கூறியுள்ளார். இது ஒரு முட்டாள்தனமான, பொறுப்பற்ற முடிவு என்றும் அவர் விமர்சித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மைசூர் சோப்ஸ் நிறுவனம் கர்நாடக அரசின் நிறுவனம் ஆகும். 1916-ல் மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் இதை நிறுவினார். வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிறுவனத்திற்கு பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியா தேவையா என்று நாராயண கவுடா கேள்வி எழுப்பியுள்ளார். "இந்த நியமனத்திற்காக கர்நாடக அரசு 6.20 கோடி ரூபாய் செலவழித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவுக்கு எங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.


அரசாங்கம் இந்த 6.20 கோடி ரூபாயை கர்நாடக மக்களின் நலனுக்காக பயன்படுத்தியிருக்கலாம். கல்வி, சுகாதாரம் அல்லது வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களுக்கு இந்த பணத்தை செலவு செய்திருக்கலாம். மக்களின் வரிப்பணத்தை அரசு வீணடிப்பது சரியல்ல. கர்நாடகாவில் திறமையான மற்றும் பிரபலமான கன்னட நடிகைகள் பலர் உள்ளனர். அவர்களை விளம்பர தூதராக நியமித்தால், அது கன்னட மக்களின் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். மேலும், உள்ளூர் கலைஞர்களுக்கு ஊக்கம் அளித்ததாகவும் இருக்கும். ஆனால், கர்நாடக அரசும், மைசூர் சோப்ஸ் நிறுவனமும் கன்னட நடிகைகளை புறக்கணித்து பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுத்தது கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. கர்நாடகாவின் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் நிறுவனம், உள்ளூர் திறமைக்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


மைசூர் சோப்ஸ் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னடர்கள்தான். கன்னடர்களுக்கு தங்கள் கலாச்சாரம் மற்றும் மொழியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, கன்னட நடிகைகளை விளம்பர தூதராக நியமிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தமன்னா பாட்டியா போன்ற பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுப்பதன் மூலம், நிறுவனம் கன்னட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. உள்ளூர் சந்தையின் உணர்வுகளையும் மதிக்கவில்லை. தமன்னா பாட்டியாவுக்கு கர்நாடக கலாச்சாரம், மொழி அல்லது மைசூர் சோப்பின் வரலாறு பற்றி எதுவும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் அவரை விளம்பர தூதராக நியமிப்பது பொருத்தமற்றது. இந்தி நடிகையை தேர்ந்தெடுப்பதன் மூலம், கர்நாடகாவின் கலாச்சாரத்தின் மீது இந்தி கலாச்சாரத்தை திணிக்க முயற்சிப்பது KRV-க்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


மைசூர் சோப்ஸ் போன்ற கர்நாடகாவின் வரலாற்று பிராண்ட், கன்னடர்களின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, அரசு உடனடியாக தமன்னா பாட்டியாவை விளம்பர தூதராக நியமித்ததை ரத்து செய்ய வேண்டும். மைசூர் சோப்ஸ் நிறுவனத்திற்கு கன்னட நடிகையை விளம்பர தூதராக நியமிக்க வேண்டும். கர்நாடக அரசு 6.20 கோடி ரூபாய் செலவு செய்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அந்த பணத்தை கர்நாடக மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மதிப்பளிக்கும் முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்று நாராயண கவுடா கூறியுள்ளார்.


சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கன்னட நடிகைகளுக்கு வாய்ப்பு அளிக்காததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்