வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

Apr 18, 2025,11:42 AM IST

திருநெல்வேலி: வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை கண்டித்து, அனைத்து ஜமாத் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.


கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில்  வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுடன் கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதனை கண்டித்து திமுக, காங்கிரஸ், திர்ணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட மொத்தம் 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டு உச்ச நீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தது.




அதன்படி, நேற்று வக்பு சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனமோ சொத்துக்களின் நிலம் வகைப்படுத்துதலோ கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றன. அதில் நெல்லை மேலப்பாளையத்தில்

அனைத்து ஜமாத், அனைத்து அரசியல் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ, கார், வேன், போன்ற வாகனங்களும் இயக்கவில்லை.  இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.


அதேபோல் வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் பதாகைகளை ஏந்தியபடி ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு முழக்கம் எழுப்பினர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

news

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்