புதுச்சேரி: புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் சார்பாக அமைச்சராக நியமிக்கப்பட்ட திருமுருகனுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே சமயம் பாஜக அமைச்சர் சாய் சரவண குமாரின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டு முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். டெல்லி வரை சென்று ஆட்சியில் இருந்து விலகி வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என பாஜக மேலிடத்தை வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக மேலிடத்திலிருந்து என் ஆர் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் புதுச்சேரியில் அமைச்சரவையில் சிறிய மாற்றம் நடந்துள்ளது. என் ஆர் காங்கிரஸ் சார்பாக கடந்த மார்ச் மாதம் அமைச்சராக திருமுருகன் பதவியேற்றார். ஆனால் திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று அவருக்கு குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த துறையை இதுவரை பார்த்து வந்தவர் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவண குமார். அவருக்கு புதிதாக, ஆதி திராவிடர் நலன், சிறுபான்மையினர் நலன் மற்றும் தீயணைப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்
பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??
புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்
ADMK to TVK: அதிமுக வினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
ஏக இறைவனுக்கும்.. அம்மை அப்பனுக்கும் நன்றி செலுத்தி.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 12)
உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து!
வெப்ப அலை : சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்!
ஜூன் வந்தாச்சு.. பள்ளிகள் திறக்கப் போகுது.. வேற என்னெல்லாம் இந்த மாசத்தில் இருக்கு?
Monday Thoughts: "தி.மு... தி..பி".. புதிய உறவால் உதயமாகும் பெயர் மாற்றங்கள்!
{{comments.comment}}