புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தை போலவே அடுத்த ஆண்டு புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி புதுச்சேரியில் மக்களை மகிழ்விக்க ரொக்கப்பணம் அல்லது பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பரிசுப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இது தை மாதத்தின் தொடக்கத்தையும், சூரிய வழிபாட்டையும் குறிக்கும் அறுவடைத் திருவிழாவாகும். இத்தகைய பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்த பொங்கல் தொகுப்பில், அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட 750 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையின் போது பரிசுத் தொகுப்புக்கு பதிலாக 750 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}