புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தை போலவே அடுத்த ஆண்டு புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி புதுச்சேரியில் மக்களை மகிழ்விக்க ரொக்கப்பணம் அல்லது பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பரிசுப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இது தை மாதத்தின் தொடக்கத்தையும், சூரிய வழிபாட்டையும் குறிக்கும் அறுவடைத் திருவிழாவாகும். இத்தகைய பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்த பொங்கல் தொகுப்பில், அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட 750 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையின் போது பரிசுத் தொகுப்புக்கு பதிலாக 750 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}