புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தை போலவே அடுத்த ஆண்டு புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி புதுச்சேரியில் மக்களை மகிழ்விக்க ரொக்கப்பணம் அல்லது பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பரிசுப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இது தை மாதத்தின் தொடக்கத்தையும், சூரிய வழிபாட்டையும் குறிக்கும் அறுவடைத் திருவிழாவாகும். இத்தகைய பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்த பொங்கல் தொகுப்பில், அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட 750 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையின் போது பரிசுத் தொகுப்புக்கு பதிலாக 750 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}