புதுச்சேரி: அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ல் நடைபெற உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு தீபாவளி பண்டிகை போல் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பொருட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என 8000த்திற்கும் அதிகமானோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களின் வருகையால் அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுத்துறை வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் அரை நாள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக தினத்தில் மதுபான கடைகளை திறக்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியிலும் அன்றைய தினம் பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}