புதுச்சேரி: அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ல் நடைபெற உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு தீபாவளி பண்டிகை போல் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பொருட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என 8000த்திற்கும் அதிகமானோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களின் வருகையால் அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுத்துறை வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் அரை நாள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக தினத்தில் மதுபான கடைகளை திறக்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியிலும் அன்றைய தினம் பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
விளையும் பயிர்!
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
படைப்பாற்றல்!
சிந்தனைச் சிதறல்.. இருக்கும் வரை தாங்கிப் பிடிப்போம்!
Srirpiya Short Story: நிழலும் நிலவுமாய்..!
உங்க வாழ்க்கையை முழுமையாக வாழுங்க.. Let your life be the proof
விருந்தோம்பல்.. தமிழர்களின் தனித்துவம்!
{{comments.comment}}