புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் அரசுப் பள்ளிகளில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிகளின் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி 7வகுப்பு நடைபெற்று வந்த நிலையில் இனி நடப்பு ஆண்டு முதல் 8 வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் கூடுதலாக பாடங்களை கற்கும் வகையில் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இனி அரசுப்பள்ளிகள் அரை மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.20க்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் மாற்றம். ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 9 மணி முதல் 9.15 அசெம்பிளி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் முதல் பாட வேளை காலை 9.15 மணி முதல் 10.00 மணி வரையும், இரண்டாவது பாட வேளை 10 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். 10.45 முதல் 10.55மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படுகிறது.
அடுத்ததாக காலை 10.55 முதல் 11.40 வரை மூன்றாவது பாடவேளையும், 11.40 முதல் 12.25 வரை நான்காவது பாட வேளையும் நடைபெறும். அதன்பின்னர் மதியம் உணவு இடைவேளையாக 12.25 முதல் 1.30 வரை ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.30 முதல் 2.10 மணி வரை ஐந்தாவது பாட வேளையும், 2.10 மணி முதல் 2.50 வரை 6வது பாடவேளையும் நடைபெறும். இதற்கு அடுத்ததாக 2.50 முதல் 3 மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழக்கப்படும். மதியம் 3 மணி முதல் 3.40 வரை 7வது பாட வேளையும், 3.40 முதல் 4.20 வரை 8வது பாட வேளையும் நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதே வேளையில் காலை நேரத்தில் ஒரு பாட நேரம் 45 நிமிடமாகவும், மதியத்துக்கு பிறகு 40 நிமிடமாகவும் பாடவேளை நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}