புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் அரசுப் பள்ளிகளில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிகளின் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி 7வகுப்பு நடைபெற்று வந்த நிலையில் இனி நடப்பு ஆண்டு முதல் 8 வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் கூடுதலாக பாடங்களை கற்கும் வகையில் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இனி அரசுப்பள்ளிகள் அரை மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.20க்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் மாற்றம். ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 9 மணி முதல் 9.15 அசெம்பிளி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் முதல் பாட வேளை காலை 9.15 மணி முதல் 10.00 மணி வரையும், இரண்டாவது பாட வேளை 10 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். 10.45 முதல் 10.55மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படுகிறது.
அடுத்ததாக காலை 10.55 முதல் 11.40 வரை மூன்றாவது பாடவேளையும், 11.40 முதல் 12.25 வரை நான்காவது பாட வேளையும் நடைபெறும். அதன்பின்னர் மதியம் உணவு இடைவேளையாக 12.25 முதல் 1.30 வரை ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.30 முதல் 2.10 மணி வரை ஐந்தாவது பாட வேளையும், 2.10 மணி முதல் 2.50 வரை 6வது பாடவேளையும் நடைபெறும். இதற்கு அடுத்ததாக 2.50 முதல் 3 மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழக்கப்படும். மதியம் 3 மணி முதல் 3.40 வரை 7வது பாட வேளையும், 3.40 முதல் 4.20 வரை 8வது பாட வேளையும் நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதே வேளையில் காலை நேரத்தில் ஒரு பாட நேரம் 45 நிமிடமாகவும், மதியத்துக்கு பிறகு 40 நிமிடமாகவும் பாடவேளை நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}