புதுச்சேரி: தமிழுக்காக போராடியவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. புதுச்சேரியில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க புதுச்சேரி அரசு வாக்குறுதி அளித்தபடி ஏதாவது குழு அமைக்கப்பட்டதா இல்லையா என்று கேட்டார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசினார். முதல்வர் ரங்கசாமி கூறுகையில், மிக மிக மதிக்க தலைவராக கலைஞர் இருக்கின்றார். தமிழுக்காக போராடியவர். தமிழக தலைவர்களையும் சார்ந்துதான் புதுச்சேரியில் நாம் இருக்கின்றோம்.

ஆனால் நீதிமன்றம் உத்தரவு உள்ளதால் புதுச்சேரியில் கலைஞர் சிலையை வைப்பதற்கு முடியாமல் உள்ளது. நிச்சயமாக கலைஞர் பெயரில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும். கலைஞர் கருணாநிதிக்கு எந்த அளவிற்கு மரியாதை செலுத்தப்படுமோ அந்த அளவிற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படும். என முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
புதுச்சேரி விமான நிலையப் பணிகள் குறித்த இன்னொரு கேள்விக்கு, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நிறைவடையாது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனது வைத்தால் விமான நிலையப் பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}