புதுச்சேரி: தமிழுக்காக போராடியவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. புதுச்சேரியில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க புதுச்சேரி அரசு வாக்குறுதி அளித்தபடி ஏதாவது குழு அமைக்கப்பட்டதா இல்லையா என்று கேட்டார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசினார். முதல்வர் ரங்கசாமி கூறுகையில், மிக மிக மதிக்க தலைவராக கலைஞர் இருக்கின்றார். தமிழுக்காக போராடியவர். தமிழக தலைவர்களையும் சார்ந்துதான் புதுச்சேரியில் நாம் இருக்கின்றோம்.
ஆனால் நீதிமன்றம் உத்தரவு உள்ளதால் புதுச்சேரியில் கலைஞர் சிலையை வைப்பதற்கு முடியாமல் உள்ளது. நிச்சயமாக கலைஞர் பெயரில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும். கலைஞர் கருணாநிதிக்கு எந்த அளவிற்கு மரியாதை செலுத்தப்படுமோ அந்த அளவிற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படும். என முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
புதுச்சேரி விமான நிலையப் பணிகள் குறித்த இன்னொரு கேள்விக்கு, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நிறைவடையாது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனது வைத்தால் விமான நிலையப் பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}