புதுச்சேரி: தமிழுக்காக போராடியவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. புதுச்சேரியில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க புதுச்சேரி அரசு வாக்குறுதி அளித்தபடி ஏதாவது குழு அமைக்கப்பட்டதா இல்லையா என்று கேட்டார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசினார். முதல்வர் ரங்கசாமி கூறுகையில், மிக மிக மதிக்க தலைவராக கலைஞர் இருக்கின்றார். தமிழுக்காக போராடியவர். தமிழக தலைவர்களையும் சார்ந்துதான் புதுச்சேரியில் நாம் இருக்கின்றோம்.
ஆனால் நீதிமன்றம் உத்தரவு உள்ளதால் புதுச்சேரியில் கலைஞர் சிலையை வைப்பதற்கு முடியாமல் உள்ளது. நிச்சயமாக கலைஞர் பெயரில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும். கலைஞர் கருணாநிதிக்கு எந்த அளவிற்கு மரியாதை செலுத்தப்படுமோ அந்த அளவிற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படும். என முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
புதுச்சேரி விமான நிலையப் பணிகள் குறித்த இன்னொரு கேள்விக்கு, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நிறைவடையாது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனது வைத்தால் விமான நிலையப் பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}