புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு.. வேட்டியால் கழுத்தை நெரித்துக் கொள்ள முயன்ற விவேகானந்தன்!

Mar 11, 2024,12:27 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான முதியவர் விவேகானந்தன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.


புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி ஆர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமி வெகு நேரமாகியும் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் அப்பகுதியை சுற்றியும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால், அவரது பெற்றோர் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசாரும் பல இடங்களில் சிறுமியை தேடியுள்ளனர்.  


இறுதியில், சிறுமியின் உடல் அவரது வீட்டில் இருந்து 100 மீட்டார் தொலைவில் உள்ள ஒரு சாக்கடையில் சிறுமியின்ந் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இவ்வழக்கை விசாரித்த போலீசார் 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். விவேகானந்தன் என்ற 59 வயதுடைய நபரும், கருணாஸ் என்ற 19 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த நிலையில், சிறையில் கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் மற்ற விசாரணை கைதிகளுடன் அடைத்தால் பிரச்சனை வரும் என்பதால் தனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் குற்றவாளி விவேகானந்தன் தனது வேட்டியால் கழுத்தை நெரித்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


சக கைதியான கருணாஸ் சத்தம் போடவே சிறை வார்டன் ஓடி வந்து காப்பாற்றி எச்சரித்தார். இதற்கிடையே, இருவரையும் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, முத்தியால்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்