உங்க குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்தாச்சா.. தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் சிறப்பு முகாம்!

Mar 03, 2024,11:05 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட தேர்தல் போல இது நடத்தப்படுகிறது.


போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாதம் நமது நாட்டில் ஒழிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் மீண்டும் இது வரக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. இதற்காக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் வருடா வருடம் நடத்தப்படுகின்றன.


அந்த வகையில்,  இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 43,051 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த மையங்களில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.




காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறும். சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளின் விரலில் அடையாள மை வைக்கப்படும். இதன் மூலம் யாருக்கெல்லாம் சொட்டு மருந்து தரப்படவில்லை என்பதை அடையாளம் கான இலகுவாக இருக்கும்.


மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தரப்படுகிறது.  கிட்டத்தட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்... நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி என்று அவர் தெரிவித்துள்ளார்.


உங்க குழந்தைக்கும் சொட்டு மருந்து கொடுத்தாச்சா.. மறவாமல் செய்வீர்.. அது உங்களது குழந்தையின் நலனுக்கானது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்