சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட தேர்தல் போல இது நடத்தப்படுகிறது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாதம் நமது நாட்டில் ஒழிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் மீண்டும் இது வரக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. இதற்காக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் வருடா வருடம் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 43,051 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த மையங்களில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறும். சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளின் விரலில் அடையாள மை வைக்கப்படும். இதன் மூலம் யாருக்கெல்லாம் சொட்டு மருந்து தரப்படவில்லை என்பதை அடையாளம் கான இலகுவாக இருக்கும்.
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தரப்படுகிறது. கிட்டத்தட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்... நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி என்று அவர் தெரிவித்துள்ளார்.
உங்க குழந்தைக்கும் சொட்டு மருந்து கொடுத்தாச்சா.. மறவாமல் செய்வீர்.. அது உங்களது குழந்தையின் நலனுக்கானது.
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
எழுதுகிறேன் என் மனதை (கடிதக் கவிதை)
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!
நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
{{comments.comment}}