பாட்னா: பீகார் மாநிலம், அர்ராவில் நடந்த பேரணியின்போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கருப்பு கொடி காட்டிய பாஜக இளைஞர் அணி தொண்டர்களுக்கு மிட்டாய் கொடுத்து அதிர வைத்தார் ராகுல் காந்தி.
ரேபரேலி எம்பியான ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டார். அப்போது, தர்பங்காவில் நடந்த பேரணியின்போது பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை சிலர் மோசமாக பேசிய வீடியோ வைரலானது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக மட்டுமல்லாமல், அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் ஓவைசியும் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அர்ராவில் நடந்த பேரணியின்போது பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் வழியில் ராகுல் காந்திக்குக் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கருப்பு கொடி காட்டிய தொண்டர்களை அருகே வருமாறு கூறிய ராகுல் காந்தி இனிப்பு மிட்டாய்களை கொடுத்தார்.

இதற்கிடையே, தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட ஒரு பதிவில், உண்மை மற்றும் அகிம்சை வெல்லும், பொய் மற்றும் வன்முறை நிலைக்காது. நீங்கள் எவ்வளவு அடிக்கவும் உடைக்கவும் விரும்பினாலும் அடியுங்கள், உடைத்து எறியுங்கள் - நாங்கள் தொடர்ந்து உண்மையையும் அரசியலமைப்பையும் பாதுகாப்போம். உண்மையே வெல்லும்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்பு மீதான தாக்குதல். பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை நாட்டில் வாக்கு திருட்டில் ஈடுபடுகின்றன.
பீகாரில் இருந்து தொடங்கிய வாக்காளர் உரிமை யாத்திரை மக்களின் வாக்குகளை திருடுவதற்கு எதிரான நாடு தழுவிய இயக்கமாக மாறும். மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வாக்குகளை திருடியது. ஆனால் பீகாரில் ஒரு வாக்கு கூட திருட பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்
டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!
இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!
தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!
அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?
சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!
மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)
{{comments.comment}}