கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி

Aug 30, 2025,05:23 PM IST

பாட்னா: பீகார் மாநிலம், அர்ராவில் நடந்த பேரணியின்போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கருப்பு கொடி காட்டிய பாஜக இளைஞர் அணி தொண்டர்களுக்கு மிட்டாய் கொடுத்து அதிர வைத்தார் ராகுல் காந்தி.


ரேபரேலி எம்பியான ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டார். அப்போது, தர்பங்காவில் நடந்த பேரணியின்போது  பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை சிலர் மோசமாக பேசிய வீடியோ வைரலானது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக மட்டுமல்லாமல், அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் ஓவைசியும் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தனர். 


இந்த நிலையில் அர்ராவில் நடந்த பேரணியின்போது பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் வழியில் ராகுல் காந்திக்குக் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கருப்பு கொடி காட்டிய தொண்டர்களை அருகே வருமாறு கூறிய ராகுல் காந்தி இனிப்பு மிட்டாய்களை கொடுத்தார். 




இதற்கிடையே, தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட ஒரு பதிவில், உண்மை மற்றும் அகிம்சை வெல்லும், பொய் மற்றும் வன்முறை நிலைக்காது. நீங்கள் எவ்வளவு அடிக்கவும் உடைக்கவும் விரும்பினாலும் அடியுங்கள், உடைத்து எறியுங்கள் - நாங்கள் தொடர்ந்து உண்மையையும் அரசியலமைப்பையும் பாதுகாப்போம். உண்மையே வெல்லும்.


வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்பு மீதான தாக்குதல். பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை நாட்டில் வாக்கு திருட்டில் ஈடுபடுகின்றன.


பீகாரில் இருந்து தொடங்கிய வாக்காளர் உரிமை யாத்திரை மக்களின் வாக்குகளை திருடுவதற்கு எதிரான நாடு தழுவிய இயக்கமாக மாறும்.  மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வாக்குகளை திருடியது. ஆனால் பீகாரில் ஒரு வாக்கு கூட திருட பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்