பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகும் மத்திய அரசு திருந்தவில்லை.. ராகுல் காந்தி கண்டனம்

Oct 12, 2024,05:26 PM IST

திருவள்ளூர்:   கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்த பாக்மதி  பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. சில பெட்டிகள் தடம் புரண்டன.இருப்பினும் இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.


விபத்து நடந்த இடத்தில் தற்போது வரை 12 நேரமாக மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கனரக வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தடம் புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது. மறுபுறம் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாகவும் பெங்களூரில் இருந்து வந்த உயர்மட்ட குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 




இதற்கிடையே தெற்கு ரயில்வே மேலாளர் ஆர் என் சிங்  விபத்துக்கான காரணம் குறித்து, பாகமதி பயணிகள் ரயில் மெயின் லைனில்  நிற்காமல் சென்றிருக்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் மெயின் லைனில் க்ரீன் சிக்னல் போடப்பட்டிருந்தும் லூப் லைனில் பயணிகள் ரயில் சென்றால் நின்றிருந்த சரக்கு ரயில் பின்புறம் மோதி விபத்திற்கு உள்ளானது  என  தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் கவரப்பேட்டை விபத்து குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:


ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்து  போலவே கவரப்பேட்டையிலும் ரயில் விபத்து நடந்துள்ளது. ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சகம் பொறுப்பேற்க வேண்டும். ஏராளமான ரயில் விபத்துக்கள் நடந்து பல உயிர்கள் பறிபோன போதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.


11 பெட்டிகளில் 8 அகற்றம்


இதற்கிடையே, கவரப்பேட்டை ரயில் விபத்தில் மொத்தம் 11 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. 11 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் எட்டு பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னை கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளதால் பகுதிகளில் சீரமைப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்