டெல்லி: மோடி மீடியா வெளியிட்ட போல் இது, இதை எக்சிட் போல் என்று சொல்லாதீர்கள். நாங்கள் 295 இடங்களில் வெல்வோம் என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தொடர்பான எக்சிட் போல் முடிவுகள் நேற்று வெளியாகின. பல்வேறு ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட இந்த கருத்துக் கணிப்புகளில் மீண்டும் பாஜகவே வெல்லும், ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நிராகரித்துள்ளன. இது பாஜகவே ரெடி செய்த கருத்துக் கணிப்பு முடிவு. இது மக்களை திசை திருப்பும் எக்சிட் போல் முடிவு என்றும் அவை கூறியுள்ளன.
இந்த நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர். அதற்கு அவர், இது எக்ஸிட் போல் அல்ல. இது மோடி மீடியா போல். இது அவர்களுக்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு என்று கூறிவிட்டுச் சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்த அவர், நீங்கள் சித்து மூசேவின் பாடல் 295 கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு மீண்டும் அழுத்தம் திருத்தமாக 295 என்று, அதாவது இந்தியா கூட்டணி வெல்லப் போகும் சீட்டுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு விட்டு ராகுல் காந்தி சென்றார்.
நேற்று வெளியான பல்வேறு எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளில் பாஜகவிற்கு அதிக அளவிலான இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துக் கணிப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன. 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்புகள் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
{{comments.comment}}